search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    கோவில்பட்டியில் மது அருந்துவதை தட்டிக்கேட்ட மனைவி மீது தீ வைத்த பெயிண்டர்

    கோவில்பட்டியில் மது அருந்துவதை தட்டிக்கேட்ட மனைவி மீது தீ வைத்த பெயிண்டரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி பாரதி நகரை சேர்ந்தவர் குருநாதன் ( வயது 39). பெயிண்டர். இவரது மனைவி தங்கம் (38). இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது. 12வயதில் ஒரு மகள் உள்ளார். 

    குருநாதனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்த காரணத்தினால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குருநாதன் வீட்டில் இருந்த மண் எண்ணையை எடுத்து மனைவி மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

     இதனால் தங்கம் அலறி துடித்துள்ளார்.  சத்தம் கேட்டு அவரது உறவினர்கள் அங்கு  ஓடிச்சென்று தங்கத்ைத மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள குருநாதனை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×