என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோவில்பட்டியில் மது அருந்துவதை தட்டிக்கேட்ட மனைவி மீது தீ வைத்த பெயிண்டர்
Byமாலை மலர்16 May 2022 10:14 AM GMT (Updated: 16 May 2022 10:14 AM GMT)
கோவில்பட்டியில் மது அருந்துவதை தட்டிக்கேட்ட மனைவி மீது தீ வைத்த பெயிண்டரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி பாரதி நகரை சேர்ந்தவர் குருநாதன் ( வயது 39). பெயிண்டர். இவரது மனைவி தங்கம் (38). இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது. 12வயதில் ஒரு மகள் உள்ளார்.
குருநாதனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்த காரணத்தினால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குருநாதன் வீட்டில் இருந்த மண் எண்ணையை எடுத்து மனைவி மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதனால் தங்கம் அலறி துடித்துள்ளார். சத்தம் கேட்டு அவரது உறவினர்கள் அங்கு ஓடிச்சென்று தங்கத்ைத மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள குருநாதனை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X