search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    குமாரபாளையத்தில் போலீஸ் சோதனையில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்

    குமாரபாளையத்தில் போலீஸ் சோதனையில் 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நகரின் பல இடங்களில் கஞ்சா விற்பனை அதிகம் உள்ளதாக தகவல் கிடைத்ததையொட்டி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப் இன்ஸ்பெக்டர் மலர்விழி உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். 

    பள்ளிபாளையம் சாலை, பெருமாபாளையம் புதூர் பகுதியில் ரோந்து சென்ற போது, அங்கு ஒருவர் கட்டைப்பை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார். 

    போலீசாரை கண்டதும் பையை போட்டுவிட்டு தப்பியோடி விட்டார். அந்த பையை கைப்பற்றி சோதனை செய்த போது அதில்  3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. 

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். 
    Next Story
    ×