search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டில் 20 ஆண்டு சாதனை- வி.ஜி. சந்தோசம் வாழ்த்து

    பேரிடை பெருமழை வந்தபோது, இரவு பகல் பாராது சேற்றிலே நாற்றங்கால்களில் நடந்துச் சென்று போர்க்கால நடவடிக்கைகளை செயல்படுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி கண்டார் என வி.ஜி. சந்தோசம் கூறியுள்ளார்.
    சென்னை:

    தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்று, அரியணையில் அமர்ந்து முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் வழியில் கடந்த ஓராண்டாக, தமிழகம் மட்டுமல்லாது உலகமே திரும்பி பார்க்கும் வண்ணம் துறைதோறும் முன்னேற்றம் காண திட்டங்கள் தீட்டி, நல்லாட்சி புரிந்து வருகிறீர். ஓராண்டில் 20 ஆண்டு சாதனைகளை செய்து முடித்ததை உலகமே போற்றுகின்றது.

    கொரோனா என்னும் கொடிய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை நேரில் சென்று பார்த்து எல்லா மருத்துவ உதவிகளைச் செய்தது எவராலும் மறக்க முடியாத சரித்திர சான்றாகும். பேரிடை பெருமழை வந்தபோது, இரவு பகல் பாராது சேற்றிலே நாற்றங்கால்களில் நடந்துச் சென்று போர்க்கால நடவடிக்கைகளை செயல்படுத்தி, வெற்றி கண்டார்.

    பெண்களுக்காக இலவச பேருந்து அளித்து, மகளிர் மனங்குளிர வைத்து, அவர்கள் வாயால் மகராசன் நல்லாட்சி செய்கிறார் என்று போற்றக் காண்கின்றோம். தமிழுக்கு தமிழ் சான்றோர்க்கு தாங்கள் அளித்து வரும் தமிழ்பணிக்கு ஈடு இணையில்லை.

    இவ்வாறு தாங்கள் ஓராண்டுகள் செய்த வெற்றிகளை பார்த்தால் புறநானூற்றுப் புலவர்கள் சங்கப் பாடல்களால் உங்களை மகிழ்விப்பார்கள்.

    யானையால் யானையாத் தற்று. (குறள் 678)

    என்னும் குறளால் உங்களை வாழ்த்தி மகிழ்கின்றேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
    Next Story
    ×