search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேஎஸ் அழகிரி
    X
    கேஎஸ் அழகிரி

    இலங்கை நிவாரண நிதிக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள் ஒருமாத சம்பளம் தரவேண்டும்- கே.எஸ்.அழகிரி

    தமிழ்நாடு நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை இலங்கை தமிழர்களின் துயரை போக்கிடும் வகையில் நிதியுதவி அளிக்கும்படி கேஎஸ் அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    இலங்கை அரசின் தவறான பொருளாதார கொள்கைகளின் காரணமாக அங்கு வாழ்கிற இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகி வருகிறார்கள். அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையால் அவர்களுடைய வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் வாழ்கிற மக்களின் இன்னலைப் போக்கிடும் வகையில் ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    இதையொட்டி தமிழ்நாடு நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை இலங்கை தமிழர்களின் துயரை போக்கிடும் வகையில் நிதியுதவி அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×