search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை பொருளாதார நெருக்கடி"

    • பொதுமக்கள் நடத்திய போராட்டங்களால் இலங்கையில் அதிபராக ரணில் விக்கிரமசிங்கே கடந்த ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.
    • இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்த கூட்டத்தில் தமிழ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    கொழும்பு:

    இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி அந்நாட்டு அரசியலையும் மாற்றி அமைத்தது. பொதுமக்கள் நடத்திய போராட்டங்களால் இலங்கையில் அதிபராக ரணில் விக்கிரமசிங்கே கடந்த ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.

    இதையடுத்து அவர் நாட்டில் நிலவி வந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீளுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் இலங்கையில் வசித்து வரும் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ் கட்சி தலைவர்களுடன் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களுக்கான நில உரிமைகள் வழங்குதல், நல்லிணக்கம், மீன்பிடி தொடர்பாக சட்டங்களை அமல்படுத்துவது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    மேலும் இந்தியாவில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்தும், அவர்களை மீண்டும் இலங்கையில் குடியமர்த்துவது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

    • இலங்கை தலைநகர் கொழும்புவில் ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி தேசிய மாநாடு நடந்தது.
    • அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலின் போது நாங்கள் மீண்டும் வலுவாக வருவோம்.

    கொழும்பு:

    இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நெருக்கடிக்கு அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே தான் காரணம். அவர்கள் இருவரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என போராட்டம் நடந்தது.

    இந்த போரட்டம் வன்முறையாக மாறியது. இதையடுத்து கோத்தபய ராஜபக்சேவும், மகிந்த ராஜபக்சேவும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

    இதையடுத்து இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றார். பின்னர் இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவியுடன் இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக மீண்டது.

    இலங்கையில் மீண்டும் இயல்பு நிலை திரும்பியதால் வெளிநாட்டில் இருந்த கோத்தபய ராஜபக்சே சொந்த நாடு திரும்பினார்.

    ஆனாலும் சில காலம் அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்தார். இந்த சூழ்நிலையில் தற்போது மகிந்த ராஜபக்சே ஆளுங்கட்சி தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    இலங்கை தலைநகர் கொழும்புவில் ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி தேசிய மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் 78 வயதான மகிந்த ராஜபக்சே கட்சியின் தலைவராக தேர்வு செய்யபப்பட்டார். அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    மாநாட்டில் மகிந்த ராஜபக்சே பேசியதாவது:-

    இலங்கையில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியதாக நியாயமற்ற முறையில் நாங்கள் குற்றம் சாட்டப்பட்டு உள்ளோம். விடுதலை புலிகளுடனான போரில் ஈடுபட்ட போது தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் செல்வதை உறுதிபடுத்தினோம். நம்மை அவதூறு செய்து கேலி செய்பவர்கள் அதை தொடரட்டும். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலின் போது நாங்கள் மீண்டும் வலுவாக வருவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை தற்போது மீண்டு வருகிறது.
    • பெண்கள் தலைமையிலான சிறு, குறு, நிலையான நிதியை மேம்படுத்தவும் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

    பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை தற்போது மீண்டு வருகிறது. அந்நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கியது. இதில் முதல் தவணை வழங்கப்பட்ட நிலையில் 2-வது தவணைக்காக இலங்கை காத்திருக்கிறது.

    இந்த நிலையில் இலங்கையின் நிதித்துறையை ஸ்திரப்படுத்த உதவ அந்நாட்டுக்கு ரூ.1668 கோடி கடனுதவி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்தது.

    நாட்டின் வங்கி துறையில் ஸ்திரத்தன்மை, மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்தவும், பெண்கள் தலைமையிலான சிறு, குறு, நிலையான நிதியை மேம்படுத்தவும் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

    • பால் பாக்கெட் கூட அதிக விலைக்கு வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கண்ணீருடன் கூறினர்.
    • தமிழகத்துக்கு அகதிகளாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு கிடைக்காமல் மக்கள் தவித்து வருகிறார்கள். மேலும் உணவுப் பொருட்களின் பற்றாக்குறையால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.

    இவ்வாறான நிலையில் வாழ்வாதாரம் தேடி ஏராளமானோர் இலங்கையில் இருந்து வெளியேறி இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்.

    குறிப்பாக யாழ்ப்பாணம், தலைமன்னார் பகுதியில் இருந்து குடும்பம், குடும்பமாக லட்சக்கணக்கில் பணம் கொடுத்து படகுகளில் தனுஷ்கோடி, அரிச்சல் முனை கடற்கரை பகுதிக்கு வருகிறார்கள். அந்த வகையில் இதுவரை 90-க்கும் மேற்பட்டோர் தமிழகத்துக்கு அகதிகளாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் இலங்கை தலைமன்னாரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் இன்று அதிகாலை அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர். முன்னதாக ராமேசுவரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் இலங்கை அகதிகள் வந்துள்ளதாக தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைதொடர்ந்து, அங்கு சென்ற போலீசார் 7 அகதிகளையும் மீட்டு மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்ட னர். இதில் அவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் தொல்புறத்தை சேர்ந்த நாகராஜ் (43), இவரது மனைவி வந்தினி (38) மற்றும் அனோ ஜன்ண (13), கஜிவன் (9), தனுஷ்கா (4), அஜந்தன் (18), கிசாலினி (17) ஆகியோர் படகுக்கு ரூ.1.50 லட்சம் கொடுத்து தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு வந்தாக தெரிவித்தனர்.

    மேலும் அங்கு வாழ்வதற்கான உகந்த சூழல் இல்லை என்றும், பால் பாக்கெட் கூட அதிக விலைக்கு வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கண்ணீருடன் கூறினர்.

    விசாரணைக்கு பின்னர் 7 அகதிகளையும் மண்டபம் கேம்ப் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்க உள்ளதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தெரிவித்தனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி தற்போது வரை குறையாததால் அகதிகள் வருகை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கையும், இந்தியா, சீனா போன்ற வெளிநாடுகளின் உதவியுடன் கொஞ்சம் சீராக மூச்சுவிடத் தொடங்கியுள்ளது.
    • பொருளாதார சரிவு தொடர்பாக ராஜபக்சே சகோதரர்கள் மீது மேலும் பல வழக்குகள் தொடரப்படலாம்.

    கொழும்பு:

    அண்டை நாடான இலங்கை, சுதந்திரத்துக்குப் பின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை கடந்த ஆண்டு சந்தித்தது. அன்னியச் செலாவணி இருப்பு முற்றிலுமாக காலியான நிலையில், விலைவாசி விண்ணைத் தாண்டிச் சென்றது. உணவுப்பொருட்கள், எரிபொருள், மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. பொறுமை இழந்து கொந்தளித்த பொதுமக்கள், தெருவில் இறங்கிப் போராடினர். பல மாதங்கள் நீடித்த போராட்டத்தால் அதிபர் பதவியில் இருந்து கீழிறங்கிய கோத்தபய ராஜபக்சே, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார்.

    பின்னர் அவர் நாடு திரும்பிவிட்டார். இலங்கையும், இந்தியா, சீனா போன்ற வெளிநாடுகளின் உதவியுடன் கொஞ்சம் சீராக மூச்சுவிடத் தொடங்கியுள்ளது. ஆனால் 46.9 பில்லியன் டாலர்கள் என்ற மிகப் பெரிய கடன் மலையில் இலங்கை உட்கார்ந்திருக்கிறது. அதில் சுமார் பாதி அளவு, சீனாவுக்கு கொடுக்க வேண்டிய கடன் ஆகும்.

    இந்த நிலையில், இலங்கை சர்வதேச ஊழல் கண்காணிப்பகம் (டிரான்பரன்சி இன்டர்நேசனல்) மற்றும் 4 செயல்பாட்டாளர்கள், நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் அமர்வு, நேற்று முன்தினம் தீர்ப்பு கூறியது. அதில் 4 நீதிபதிகள், இலங்கையில் 2019-2022-ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு, முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சே ஆகிய ராஜபக்சே சகோதரர்கள், பொருளாதாரத்தை தவறாக கையாண்டதே காரணம் என்று அதிரடியாக தீர்ப்பு கூறினர். மேலும், இலங்கை மத்திய வங்கி முன்னாள் கவர்னர்கள் அஜித் நிவார்டு கப்ரால், லக்ஷ்மண், கருவூலத்துறை முன்னாள் செயலாளர்கள் ஜெயசுந்தரா, அட்டிகலே உள்ளிட்ட உயர்பொறுப்பு வகித்த 13 பேரும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

    இந்த வழக்கில் ராஜபக்சே சகோதரர்கள் உள்ளிட்டோருக்கு சுப்ரீம் கோர்ட்டு அபராதம் எதையும் விதிக்கவில்லை என்றாலும், மனுதாரர்களின் வழக்குச் செலவுக்கு தலா ரூ.1½ லட்சம் வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது.

    இந்த தீர்ப்பை தொடர்ந்து, பொருளாதார சரிவு தொடர்பாக ராஜபக்சே சகோதரர்கள் மீது மேலும் பல வழக்குகள் தொடரப்படலாம் என்று கூறப்படுகிறது.

    • கஸ்தூரி மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டவர் என கூறப்படுகிறது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கஸ்தூரியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மண்டபம்:

    இலங்கையில் ஏற்பட்டு உள்ள பொருளாதார நெருக்கடியால் வாழ்வாதாரம் இழந்த 300-க்கும் மேற்பட்டோர் இதுவரை அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்கள் மண்டபம், ராமேசுவரம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கை மன்னார் மாவட்டம் உயிலங் குளத்தை சேர்ந்த பிரதீப் (வயது32), அவரது மனைவி கஸ்தூரி ஆகியோர் தங்களது 2 கைக்குழந்தைகளுடன் தனுஷ்கோடி வந்தனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி அதன் பின் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

    கஸ்தூரி மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டவர் என கூறப்படுகிறது. இதற்காக வாய்ப்புகளை தேடி சென்னை, திருச்சி போன்ற நகரங்களுக்கு சென்று வந்துள்ளார். இது தொடர்பாக போலீசிலும் தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.அகதிகளாக வந்தவர்கள் வெளியே செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இதனை மீறி கஸ்தூரி வெளியே சென்றுள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி மாடலிங் பணிக்காக சென்னை செல்வதாக கணவர் பிரதீப் பிடம் கஸ்தூரி கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அதன் பின் அவர் கணவரை தொடர்பு கொள்ளவில்லை. செல்போனும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டுள்ளது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதீப் சென்னை சென்று கஸ்தூரி கொடுத்த முகவரியில் விசாரித்துள்ளார். அப்போது மனைவி கொடுத்த முகவரி தவறானது என தெரியவந்தது. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து பிரதீப் தனது மனைவி மாயமானது குறித்து மண்டபம் போலீசில்புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கஸ்தூரியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கஸ்தூரி மாடலிங்கிற்காக யாரை தொடர்பு கொண்டார்? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று போலீசார் தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். கஸ்தூரி மாயமானது தொடர்பாக விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    • பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
    • இலங்கையில் பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வருவதற்கான முதல் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

    கொழும்பு:

    நமது அண்டை நாடான இலங்கையில் கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அந்நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் குதித்தனர். இதனால் இலங்கையில் அதிரடி அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தது. அந்நாட்டு அதிபராக ரணில் விக்கிரம சிங்கே பதவி ஏற்றார்.

    இதையடுத்து அவர் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்த நிலையில் பொருளாதாரத்தில் மீட்சி அடைந்து வருவதாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    எங்களது கொள்கையில் தீர்மானமாக செயலாற்றியதன் பலனாக இன்று இலங்கையில் பணவீக்கம் குறைந்து வருகிறது. 70 சதவீதம் வரை உயர்ந்து இருந்த நாட்டின் பணவீக்கம் தற்போது 25.2 சதவீதமாக குறைந்துள்ளது.

    இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைந்து உள்ளது. இதனால் ஒட்டு மொத்த சமூகத்தினரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த நிலையில் இலங்கையின் மத்திய வங்கி கடந்த 3 ஆண்டுகளில் முதன்முறையாக வட்டி விகிதத்தினை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது.

    இது இலங்கையில் பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வருவதற்கான முதல் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

    • கடந்த ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது.
    • இலங்கைக்கு இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் உதவி அளித்தன.

    கொழும்பு :

    கடந்த ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால் பெட்ரோல், டீசல், மருந்து, உணவு பொருட்கள் வாங்க முடியாமல் தவித்தது.

    இலங்கைக்கு இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் உதவி அளித்தன. இந்தியா மொத்தம் ரூ.32 ஆயிரத்து 800 கோடி கடன் அளித்தது.

    அவற்றில் ஒரு பகுதியாக, ரூ.8 ஆயிரத்து 200 கோடி கடன் அளிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு மார்ச் மாதம், பாரத ஸ்டேட் வங்கிக்கும், இலங்கை அரசுக்கும் இடையே கையெழுத்தானது. இந்த கடனின் கால அளவு 2024-ம் ஆண்டு மார்ச் மாதம்வரை ஆகும்.

    இருப்பினும், பொருளாதார நெருக்கடியில் இருந்து இன்னும் மீளாத இலங்கை, மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க பணம் தேவைப்படுவதால், மேற்கண்ட கடன் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்குமாறு வேண்டுகோள் விடுத்தது.

    இந்தியாவும் அதை ஏற்றுக்கொண்டு, ரூ.8 ஆயிரத்து 200 கோடி கடனை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. இதுதொடர்பான திருத்த ஒப்பந்தம், இலங்கை மந்திரி சினேகன் சேமா முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.

    இதன்மூலம், இந்தியா அளித்த கடன்தொகையை அத்தியாவசிய பொருட்கள் வாங்க இலங்கை மேலும் ஓராண்டு காலத்துக்கு பயன்படுத்த முடியும் என்று இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    • இலங்கையில் வாழ்ந்து வந்த தமிழர்கள் பலர், அங்கிருந்து குடும்பம் குடும்பமாக வெளியேறி தமிழகத்திற்கு அகதிகளாக வந்தனர்.
    • இலங்கையை சேர்ந்த மேலும் 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அங்கு காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது.

    இதன் காரணமாக அங்கு நடுத்தர மற்றும் ஏழை-எளிய குடும்பத்தினர் வாழ வழியின்றி தவித்தனர். இலங்கையில் வாழ்ந்து வந்த தமிழர்கள் பலர், அங்கிருந்து குடும்பம் குடும்பமாக வெளியேறி தமிழகத்திற்கு அகதிகளாக வந்தனர்.

    அவர்கள் அனைவரும் ராமேசுவரம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இலங்கையை சேர்ந்த மேலும் 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர்.

    இலங்கை வவுனியா தேக்கன்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சாந்த குமார் (வயது33). இவர் தனது மனைவி ரூப லட்சுமி(26), மகன் ஹேம் சரண்(7), மகள் யோசனா(4), மற்றொரு மகன் தருஷான்(2) ஆகியோருடன் நேற்று இரவு இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு பிளாஸ்டிக் படகு ஒன்றில் புறப்பட்டு வந்துள்ளார்.

    அவர்களை படகில் அழைத்து வந்த நபர், தனுஷ்கோடி அரிச்சல் முனை கடல் பகுதியில் நள்ளிரவில் இறக்கி விட்டு சென்று விட்டார். அவர்கள் அங்கு தவித்தபடி நின்றதை இன்று அதிகாலை 3.30 மணியளவில் அந்த வழியாக சென்ற மீனவர்கள் பார்த்தனர். அவர்கள் அதுகுறித்து ராமேசுவரம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அரிச்சல் முனை பகுதிக்கு சென்று அங்கு தவித்தபடி நின்ற சாந்தகுமார், அவரது மனைவி மற்றும் குழந்தைகளை மீட்டு கடற்கரைக்கு அழைத்து வந்தனர். அவர்கள் 5 பேரும் மண்டபம் கடலோர காவல் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டனர்.

    இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்தது குறித்து சாந்தகுமார் மற்றும் அவரது மனைவியிடம் கடலோர காவல்படையினர் விசாரணை நடத்தினர். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், அங்கு வாழ வழியின்றி தவித்ததன் காரணமாக தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக தெரிவித்தனர். மேலும் தங்களை படகில் அழைத்து வந்தவர்கள் ரூ.1லட்சம் வாங்கியதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பிறகு, அங்கிருந்து ராமேசுவரம் தனுஷ் கோடிக்கு இதுவரை 237 பேர் அகதிகளாக வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கை, இந்திய நிதியமைச்சக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாக அரசு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • இந்த கடனுதவி இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான வர்த்தகத்துக்கு பயன்படுத்தப்படும்

    கொழும்பு:

    இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக இந்தியா உதவிகளை செய்து வருகிறது. அவ்வகையில் இந்தியாவிடமிருந்து இலங்கை 100 கோடி டாலர்கள் புதிய தற்காலிக கடன் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொள்முதல் செய்வதற்காக இலங்கை இந்த கடனுதவியை கோர உள்ளதாக அரசு பத்திரிகையில் செய்தி வெளியிட்டுள்ளது.

    இந்த கடனுதவி பெறுவதற்காக இலங்கையின் நிதியமைச்சக அதிகாரிகள், இந்திய நிதியமைச்சக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அரசு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கடனுதவி இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான வர்த்தகத்துக்கு பயன்படுத்தப்படும் என மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர் இந்திரஜித் குமாரசாமி தெரிவித்தார்.

    இலங்கை அரசு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்திடம் கடனுதவி கேட்டிருந்தது. இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.24 ஆயிரம் கோடி) கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்தது. அதில் முதல் தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படுகிறது. 2027-ம் ஆண்டு வரை இந்த கடன் பல தவணைகளாக வழங்கப்படும்.

    • பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
    • இம்ரான் கான் ஒவ்வொரு நாளும் நெருக்கடிகளை உருவாக்குகிறார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்க ளின் விலை அதிகரித்து வருகிறது.

    பெட்ரோல், டீசல், கோதுமை உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்த படி இருக்கிறது.

    நெருக்கடியில் இருந்து மீண்டு வர பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அன்னிய செலாவணி இருப்பு குறைந்து வரும் நிலையில் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

    இதற்கிடையே பாகிஸ்தானில் தேர்தல் நடத்த வேண்டும் என்று முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வலியுறுத்தி வருகிறார். இதை வலியுறுத்தி அவரது கட்சி போராட்டங்களில் ஈடுபடுகிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தானில் தேர்தல் நடத்த போதுமான பணம் இல்லை என்று அந்நாட்டு பாதுகாப்பு மந்திரி கஜாவா ஆசிப் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியருப்பதாவது:-

    பாகிஸ்தானில் தேர்தலை நடத்துவதற்கான போதுமான பணம், நிதியமைச்சகத் திடம் இல்லை. இதனால் தற்போது தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை.

    இம்ரான் கான் கூறி வரும் கொலை முயற்சி குற்றச்சாட்டு பொய்யானது. அவர் மாகாண சபைகளை அரசியலமைப்பிற்கு முரணாக கலைத்து விட்டார். ஆனால் அவர் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் மூலம் அரசியலமைப்பு ரீதியாக பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது அவர் கோர்ட்டு முன் ஆஜராக விரும்பவில்லை.

    இம்ரான் கான் தனது பதவி காலத்தில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவர்களை சிறையில் அடைத்தனர். அவர்கள் போலி வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை எதிர் கொண்டனர். தற்போது இம்ரான் கான் ஒவ்வொரு நாளும் நெருக்கடிகளை உருவாக்குகிறார். ஆனால் அவற்றை அரசாங்கம் சமாளித்து வருகிறது. இந்த நெருக்கடியில் இருந்து பாகிஸ்தான் விரைவில் வெளியே வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிகரித்து வரும் உணவு தட்டுப்பாடும், கடுமையான விலைவாசி உயர்வும் மக்களின் பட்டினியை அதிகரித்து வருகிறது.
    • ஐ.நா.வின் இந்த ஆய்வறிக்கை இலங்கை ஊடகங்களில் வெளியாகி நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    கொழும்பு :

    இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி மக்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதித்து வருகிறது. அதிகரித்து வரும் உணவு தட்டுப்பாடும், கடுமையான விலைவாசி உயர்வும் மக்களின் பட்டினியை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மக்களின் வாழ்க்கை சூழலை எவ்வாறு பாதித்து இருக்கிறது? என ஐ.நா. அங்கு ஆய்வு நடத்தியது.

    குறிப்பாக ஐ.நா.வின் உலக உணவு திட்டமும், இலங்கையின் தேசிய திட்டமிடல் துறையும் இணைந்து நடத்திய இந்த ஆய்வில் அதிர்ச்சிகரமான முடிவுகள் வெளியாகி உள்ளன. அந்தவகையில் இலங்கையில் விலைவாசி உயர்வு மற்றும் மக்களின் வாங்கும் திறன் குறைந்ததால் 80 சதவீதத்துக்கு அதிகமான குடும்பங்கள், மலிவான உணவுகள், விருப்பமில்லாத உணவுகள் அல்லது குறைவான உணவுகளையே தினந்தோறும் உண்டு வருவது கண்டறியப்பட்டு உள்ளது. சத்தான உணவுகளை குறைவாகவே மக்கள் உண்பதால் ஊட்டச்சத்து குறைபாடு அபாயம் ஏற்பட்டு இருப்பதும் தெரியவந்து உள்ளது.

    இலங்கையில் கடந்த 2 பருவங்களில் விளைச்சல் குறைந்ததால் விலைவாசி அதிகரித்து இருப்பதும், இறக்குமதி அரிசியின் விலை 20 சதவீதம் அதிகரித்து இருப்பதும் இதற்கு காரணமாக ஆய்வில் கண்டறியப்பட்டு இருக்கிறது. ஐ.நா.வின் இந்த ஆய்வறிக்கை இலங்கை ஊடகங்களில் வெளியாகி நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கை கடும் எரிபொருள் தட்டுப்பாட்டில் சிக்கியிருக்கும் நிலையில், வருகிற நாட்களில் நாட்டின் 50 சதவீத தேவையை பூர்த்தி செய்ய முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

    350 கோடி டன் கியாஸ் நிரப்பிய கப்பல் ஒன்று வந்து சேர்ந்து உள்ளது. ஆஸ்பத்திரிகள், மயானங்கள் மற்றும் ஓட்டல்கள் போன்ற மொத்தமாக வாங்குவோருக்கு மட்டுமே இதை வினியோகிப்போம். பின்னர் நான்கு மாதங்களுக்கு தேவையான கியாஸ் தொகுப்பை பெறுவோம். அவற்றை பாதுகாக்க 14 நாட்கள் ஆகும். அதுபோல இன்னும் சில தொகுப்புகள் விரைவில் கிடைக்கும் என நம்புகிறோம்.

    தற்போது 7 நாட்களுக்கு தேவையான எரிபொருள் நம்மிடம் இருப்பு உள்ளது. எனினும், வரும் வாரங்களில் 4 ஆயிரம் கோடி டன் எரிபொருளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவுடன் கையெழுத்திட உள்ள ஒப்பந்தத்துக்கு பின்னர் எரிபொருள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் நாட்டின் தேவையில் 50 சதவீதத்தை எப்படியும் வழங்க முடியும். அன்னிய செலாவணி நெருக்கடி மட்டுமின்றி இலங்கை ரூபாயின் பற்றாக்குறையும் உள்ளது.

    நான் ஏற்கனவே சர்வதேச நிதிய நிர்வாக இயக்குனரிடம் பேசியுள்ளேன். அவர் உதவியை விரைவுபடுத்துவதாக உறுதியளித்துள்ளார். மேலும், அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனும் இலங்கைக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளார். இவ்வாறு நமது நிலைமையை உலகம் முழுவதும் கவனித்து வருவதுடன், உதவுவதற்கும் தயாராகி வருகிறது என்று ரணில் விக்ரமசிங்கே கூறினார்.

    ×