search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமேஸ்வர் ஆலயத்தில் உள்ள பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு  அருள் பாலித்த காட்சி.
    X
    பரமேஸ்வர் ஆலயத்தில் உள்ள பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி.

    சித்திரை மாத கிருத்திகை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை

    பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சித்திரை மாத கிருத்திகை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் கோப்பணம்பாளையம் பரமேஸ்வர் ஆலயத்தில் உள்ள பாலமுருகன், நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள வள்ளி- தெய்வானை சமேத முருகனுக்கு சித்திரை மாத கிருத்திகை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் ,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. 

    அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள்பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் கபிலர்மலையில் உள்ள ‌பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி கோயில், பரமத்தி அடுத்த பிராந்தகத்தில்  34.5 அடி உயரம் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை‌ முருகன் கோவில் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகமும்,சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
    Next Story
    ×