என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நாமக்கல் அருகே நீச்சல் பழக சென்ற மாணவன் கிணற்றில் மூழ்கி பலி
Byமாலை மலர்17 April 2022 5:54 AM GMT (Updated: 17 April 2022 5:54 AM GMT)
நாமக்கல் அருகே நீச்சல் பழக சென்றபோது பிளஸ்1 மாணவன் கிணற்றில் மூழ்கி பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் அருகே உள்ள லக்கம்பாளையத்தை சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் தினேஷ்குமார்(வயது 17). இவர் நல்லிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்1 படித்து வந்தார்.
பள்ளி மாணவன் தினேஷ்குமார், தனது நண்பர்கள் 4 பேருடன் நல்லிபாளையத்தில் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் பின்புறத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இருக்கும் கிணற்றில் நீச்சல் பழக சென்றார்.
அப்போது கிணற்றுக்குள் குதித்த தினேஷ்குமார் தண்ணீரில் மூழ்கி பலியானான். இதை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். மேலும் இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நாமக்கல் தீயணைப்பு துறையினர் பள்ளி மாணவனை மீட்டனர். பின்னர் மாணவனின் உடலை நாமக்கல் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X