search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீச்சல்"

    • குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
    • காலை வேளையில் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

    உடல் எடையை குறைப்பதற்கு பலரும் கடுமையான பயிற்சி முறைகளை கையாளுகிறார்கள். அதன் மூலம் அதிக கலோரிகள் எரிக்கப்படும் என்று நம்புகிறார்கள். அப்படி கலோரிகளை வேகமாக எரிப்பதன் மூலம் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியாது. உடற்பயிற்சி வழக்கத்தை முறையாக பின்பற்றி வருவதுடன் மேலும் சில வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அவை குறித்து பார்ப்போம்.

    1. தண்ணீர்:

    காலையில் எழும்போது பலருக்கும் ஒருவித சோர்வு எட்டிப்பார்க்கும். பல் துலக்கியதும் தண்ணீர் பருகுவதன் மூலம் அதனை விரட்டியடிக்கலாம். ஒரு டம்ளர் சூடான நீருடன் சிறிதளவு தேன் கலந்து பருகலாம். சியா விதை அல்லது ஆளிவிதையை சூடான நீரில் கலந்தும் பருகலாம். இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவும். உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும். வயிறு நிரம்பிய உணர்வையும் தரும். அதனால் காலை வேளையில் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவும் செய்யலாம். உடல் எடை அதிகரிப்பதையும் கட்டுப்படுத்தலாம்.

    2. உடற்பயிற்சி:

    தினமும் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அது முடியாத பட்சத்தில் ஏதாவதொரு யோகாசனம் மேற்கொள்ள வேண்டும். அது சுறுசுறுப்பாக உணர வைக்கும். அதிக கலோரிகளை எரிக்க உதவுவதோடு மன ஆரோக்கியத்துக்கும் நலம் சேர்க்கும். உடல் எடையை குறைப்பதற்கும் உதவும்.

    3. புரதம்-நார்ச்சத்து:

    காலை உணவை ஒரு போதும் தவிர்க்கக்கூடாது. அது புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவாக அமைந்திருப்பது சிறப்பானது. நீண்ட நேரம் வயிறு நிரம்பி இருக்கும் உணர்வை அவை தரும். மதிய உணவுக்கு இடையே தேவையற்ற நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதையும் தடுக்க உதவும். உடல் எடையை குறைப்பதற்கும் வழிவகுக்கும்.

    4. நீர்ச்சத்து:

    எல்லா பருவ காலநிலையிலும் உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். அதிலும் கோடையில் வியர்வை அதிகமாக வெளியேறி எலக்ட்ரோலைட் சம நிலையின்மை மற்றும் நீரிழப்புக்கு வழிவகுக்கும். எனவே கோடை காலத்தில் உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பழங்கள், காய்கறிகள், புத்துணர்ச்சியூட்டும் பானங்களை அடிக்கடி பருக வேண்டும். அவை உடல் எடையை குறைப்பதற்கும் வித்திடும்.

    5. நீச்சல்:

    நீச்சல் மனதுக்கு புத்துணர்ச்சியூட்டும். உடலுக்கும் சிறந்த பயிற்சியாகவும் அமையும். கோடையில் ஏற்படும் சோர்வை விரட்டி உற்சாகத்தையும் கொடுக்கும். நீச்சல் போன்ற பயிற்சிகளை செய்வது டோபமைன் வெளியீட்டை தூண்டும். தொப்பை கொழுப்பை எரிப்பதற்கு இது நல்ல பயிற்சியாகவும் அமையும்.

    6. இரவு உணவு:

    கோடை காலத்தில் இரவு உணவை குறைவாகவே சாப்பிட வேண்டும். அவை எளிதில் செரிமானமாகும் விதமாகவும் இருக்க வேண்டும். இரவில் தாமதமாக சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

    7. தூக்கம்:

    முறையான தூக்கம் முக்கியம். அது மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும். போதுமான நேரம் தூங்காதது எடை அதிகரிப்பு மற்றும் பசிக்கு வழிவகுக்கும்.

    • குழந்தைகளை திறமையானவர்களாக வளர்க்க விரும்புகிறார்கள்.
    • பள்ளிகளில் பாடத்திட்டத்துடன் பயிற்றுவிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு பெற்றோரும் மற்ற குழந்தைகளை விட தங்கள் குழந்தைகளை திறமையானவர்களாக வளர்க்க விரும்புகிறார்கள். படிப்பு மட்டுமின்றி நீச்சல், கராத்தே, பரதநாட்டியம், விளையாட்டு உள்ளிட்ட பிற தனித்திறன்களையும் தங்கள் குழந்தைகள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் கூடுதல் ஆர்வம் காட்டுகிறார்கள். அது சார்ந்த பயிற்சி வகுப்புகளில் சிறு வயதிலேயே சேர்த்துவிடவும் செய்கிறார்கள். ஆனால் ஒரு சில பயிற்சிகளை குறிப்பிட்ட வயதில் மேற்கொள்வதுதான் அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது. எந்த வயதில் எந்த பயிற்சியை தொடங்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.

    ஸ்கேட்டிங், சிலம்பம், கால்பந்து

    3 முதல் 5 வயதுக்குள் ஸ்கேட்டிங், சிலம்பம், கால்பந்து பயிற்சி பெற தொடங்கலாம். இந்த வயதுகளில்தான் குழந்தைகள் ஓடவும், குதிக்கவும், கால்பந்து அல்லது வேறு எந்த பந்தையும் வீசி எறிந்து விளையாடுவதற்கான சமநிலையை வளர்த்துக் கொள்ளவும் முடியும். மேலும் இந்த வயதுகளில்தான் அவர்களின் பார்வை வளர்ச்சி அடையும் நிலையில் இருக்கும். கடுமையான காயங்களுக்கு கால்பந்து பெயர் பெற்றது. கால்களில் சுளுக்கு, எலும்பு முறிவு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எதிர்காலத்தில் கால்பந்து வீரராக விரும்பினால் காயங்கள் விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

     நீச்சல்

    4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் நீச்சல் பயிற்சியை தொடங்கலாம் என்று அமெரிக்க குழந்தைகள் நல மருத்துவ பயிற்சி நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. அந்த வயதுதான் நீச்சலுக்குப் பொருத்தமான உடல் வளர்ச்சி கொண்டதாக கருதப்படுகிறது. இருப்பினும் 1 முதல் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் நீரில் மூழ்கும் அபாயத்தை தடுப்பதற்கு நீச்சல் பயிற்சி உதவும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    கராத்தே

    பெரும்பாலான குழந்தைகள் தற்காப்புக் கலை பயிற்சிகளை 3 வயதில் பழகத் தொடங்குகிறார்கள். இருப்பினும் குழந்தைகளின் உடல் திறன் மற்றும் பள்ளிகளைப் பொறுத்து மாறுபடுகிறது. சில பள்ளிகளில் பாடத்திட்டத்துடன் பயிற்றுவிக்கப்படுகிறது. சிறுவயதிலேயே பயிற்சியைத் தொடங்குவது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும், மற்றவர்களுடன் பழகுவதற்கு தடையாக இருக்கும் கூச்சத்தை போக்கவும் உதவுகிறது. மேலும் உடல் சமநிலை, கேட்கும் திறன், அடிப்படை தற்காப்பு திறன், கை, கண்கள் ஒருங்கிணைப்பு போன்றவற்றை வளர்த்துக்கொள்ள உதவுகிறது.

     இசை

    4 முதல் 7 வயது, இசைக்கருவிகளை கையாள்வதற்கும், கற்றுக்கொள்ளத் தொடங்குவதற்கும் ஏற்றது. குழந்தைகளின் கைகளும், மனமும் இசையின் அடிப்படைகளைப் புரிந்து கொள்வதற்கு ஏதுவாகவும் இருக்கும்.

    பரத நாட்டியம்

    பெரும்பாலான குழந்தைகள் 5 முதல் 6 வயதில் பரத நாட்டியம் கற்கத் தொடங்குகிறார்கள். ஏனெனில் அந்த வயதுகளில் எலும்புகள் உருவாகிக்கொண்டுதான் இருக்கும். எலும்பு அமைப்பு முழு வலிமை அடைந்திருக்காது என்ற கருத்து நிலவுகிறது. பரத நாட்டிய நடன வடிவத்தில் கடினமான தோரணைகள் இருப்பதால் அதற்கேற்ப உடல்வாகு அமையும் வரை காத்திருப்பது நல்லது என்பது பரதநாட்டிய கலைஞர்களின் கருத்தாக இருக்கிறது.

    • காலை 11.30 மணிக்கு தனுஷ்கோடி அருகிலுள்ள அரிச்சல்முனை கடற்கரை பகுதியை வந்தடைந்தார்.
    • மகனை அவரது தாய் நிர்மலா கட்டியணைத்து உச்சி முகர்ந்து ஆனந்த கண்ணீர் மல்க வரவேற்றார்.

    ராமேசுவரம்:

    சென்னை திருவான்மியூரை சேர்ந்த சேர்ந்த பரத் மோகன்-நிர்மலா தேவி தம்பதியின் மகன் ஹரிஷ் (வயது 17). இவர் ஆட்டிசம் மற்றும் பேசும் திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி ஆவார். இருந்தபோதிலும் கல்வி, விளையாட்டு உள்ளிட்டவைகளில் மற்றவர்களை விட அதிக திறன் கொண்டவராக வலம் வந்தார்.

    அதேபோல் ஹரிஷ் சிறுவயது முதலே நீச்சலில் கூடுதல் ஆர்வம் கொண்டவராக இருந்தார். இதனை அவரது பெற்றோர் சாதனை யாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதற்காக சிறு வயது முதல் நீச்சல் பயிற்சியை முறையாக கற்றுக் கொடுக்கத் தொடங்கி னர். அதற்கு கைமேல் பலனும் கிடைத்தது.

    உள்ளூர் போட்டிகளில் மனதைரியத்துடன் பங்கேற்ற ஹரிஷ் ஏராளமான பரிசுகளை குவிக்க தொடங்கினார். இதையடுத்து கடலில் நீந்தி சாதனை படைக்க ஹரிஷை அவரது பெற்றோர் ஊக்கப்படுத்தினர். அதற்கான ஏற்பாடுகளையும், பயிற்சிகளையும் தொடர்ந்து ஹரிஷ் மேற்கொண்டார். சிறப்பு பயிற்சியாளர்களும் அவருக்கு உறுதுணையாக இருந்தனர்.

    இதையடுத்து இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான அதிக கடல் நீரோட்டம் கொண்ட பாக்ஜலசந்தியை கடக்க முடிவு செய்த ஹரிஷ் தனது பெற்றோரிடம் கூறினார். அதனை ஏற்றுக் கொண்டு பச்சைக்கொடி காட்டிய பெற்றோர் அரசிடம் உரிய அனுமதியும் பெற்றனர்.

    அதன்படி கடந்த 6-ந் தேதி ஹரிஷ் தனது தந்தை பரத்மோகன் மற்றும் 24 நீச்சல் வீரர்களுடன் ராமேசுவரத்தில் இருந்து இலங்கை சென்றனர். பின்னர் அன்று இரவு 11 மணிக்கு இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் குதித்து நீந்த தொடங்கிய ஹரிஷ் மறு நாள் (7-ந்தேதி) காலை 11.30 மணிக்கு தனுஷ்கோடி அருகிலுள்ள அரிச்சல்முனை கடற்கரை பகுதியை வந்தடைந்தார்.

    28 கிலோமீட்டர் தொலைவை சுமார் 11 மணி நேரம் 52 வினாடிகளில் அவர் இந்த சாதனையை செய்துள்ளார். அரிச்சல் முனை வந்தடைந்த மகனை அவரது தாய் நிர்மலா கட்டியணைத்து உச்சி முகர்ந்து ஆனந்த கண்ணீர் மல்க வரவேற்றார்.

    அப்போது சுங்கதுறை கண்காணிப்பாளர் சம்பத், கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் கனகராஜ் உள்ளிட்டோரும் இயலாமை என்பதை இயலும் என்று மாற்றிக்காட்டி சாதனை படைத்த ஹரிசை கைதட்டி வரவேற்று பாராட்டினர். இது உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுகிறது.

    • திடீரென ஆழமான பகுதிக்கு சென்றனர். வினு, நித்தீஷ் ஆகியோருக்கு நீச்சல் தெரியாததால் கல் குழியில் மூழ்கி இறந்தனர்.
    • 2 மணி நேர தேடுதலுக்கு பின்னர் வினு, நித்தீஷ் ஆகியோரின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

    கவுண்டன்பாளையம்:

    கோவை அருகே உள்ள கோவில்பாளையம் அருகே உள்ள செட்டிபுதூரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் வினு (வயது 18). தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த நித்தீஷ் (18). டுட்டோரியல் கல்லூரியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் 2 பேரும் அவர்களது நண்பர்களான கோட்டைபாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் தனுஷ் (21), கூலித் தொழிலாளி சுரேந்தர் (20), அன்னூர் தெலுங்குபாளையத்தை சேர்ந்த லோகேஷ்ராஜ் (22) ஆகியோருடன் பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள பிளிச்சி அருகே உள்ள காளவராயன் மலைப்பகுதிக்கு சென்றனர். பின்னர் அங்கு வைத்து 5 பேரும் மது குடித்து ஜாலியாக இருந்தனர். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த வினு, நித்தீஷ் ஆகியோர் மலை அருகே உள்ள கல் குழியில் குளிக்க சென்றனர். அப்போது அவர்கள் திடீரென ஆழமான பகுதிக்கு சென்றனர். வினு, நித்தீஷ் ஆகியோருக்கு நீச்சல் தெரியாததால் கல் குழியில் மூழ்கி இறந்தனர். நீண்ட நேரமாக குளிக்க சென்ற நண்பர்கள் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த நண்பர்கள் 2 பேரையும் தேடினர். அப்போது அவர் கல் குழியில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. இதில் அதிர்ச்சியடைந்த அவர்கள் சத்தம் போட்டனர்.

    இதனை கேட்ட அக்கம் பக்கதினர் விரைந்து சென்றனர். பின்னர் இது குறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று கல்லூரி மாணவர் உள்பட 2 பேரின் உடல்களை தேடினர். இரவு 9 மணி வரை 4 மணி நேரத்துக்கும் மேலாக தீயணைப்பு வீரர்கள் உடல்களை தேடினார். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை. இரவானதால் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் திரும்பி சென்றனர்.

    இன்று காலை 6.30 மணி முதல் மீண்டும் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர தேடுதலுக்கு பின்னர் வினு, நித்தீஷ் ஆகியோரின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

    இவர்களை போல நாயக்கனூரை சேர்ந்த பிளஸ்-1 மாணவர் நித்யானந்தன் (16) என்பவர் அவரது நண்பர்களுடன் அதே கல் குழியில் குளித்துள்ளார். அவரும் கல் குழியில் மூழ்கி இறந்தார். அவரது உடலையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பின்னர் போலீசா ர் இறந்த 3 மாணவர்களின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குளிக்க சென்றபோது பரிதாபம்
    • நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி பெலிக்ஸ் தத்தளித்துள்ளார்

    கன்னியாகுமரி :

    ராஜாக்கமங்கம் அருகே அனந்தநாடார்குடி பகுதியை சேர்ந்தவர் பிளம்மிங். இவர் மத்திய போலீஸ் படை பிரிவில் ஜம்மு காஷ்மீரில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மெர்லின் தங்க ரூபா. இவர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர்க ளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களது மூத்த மகன் பெலிக்ஸ் (வயது 14) நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று விடுமுறை என்பதால் பெலிக்ஸ் தனது தம்பி, பெரிக்ஸ் (8), அவரது நண்பர்கள் அபி (12), ரெனிஸ் (10), தாத்தா பால்மணியுடன் ராஜாக்கமங்கலம் துறை அருகே பன்றிவாய்க்கால் ஆறு சேருமிடத்தில் பொழிமுகத்தில் குளிக்க சென்றுள்ளார். பால்மணி கரையிலிருந்து அவர்களை கவனித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆழம் அதிகமான பகுதிக்கு பெலிக்ஸ் சென்றுள்ளார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி பெலிக்ஸ் தத்தளித்துள்ளார். இதை பார்த்த சக நண்பர் சத்தம் போட்டுள்ளார். அதற்குள் பெலிக்ஸ் தண்ணீரில் மூழ்கினார். பின்னர் அக்கம் பக்கத்தினர் தண்ணீரில் மூழ்கிய பெலிக்ஸை மீட்டு கரைக்கு கொண்டு வந்து ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து ராஜாக்கமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றார். பள்ளி மாணவன் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • அருள்தாஸ்( வயது 23)இவர் பூக்கடையில் வேலை பார்த்து வருகிறார். பூவுடன் சேர்த்து தழையை பறிக்க ஏரிக்கு இவருடன் 5 பேர் கொண்ட நண்பர்கள் சென்றனர்.
    • பின்னர் அதே ஏரியில் குளித்த போது நீச்சல் தெரியாததால் அருள் தாஸ் ஏரியில் மூழ்கி பலியானார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள தேசூர் பாட்டை பகுதியை சேர்ந்த மின் ஊழியர் ஏசுதாஸ் மகன் அருள்தாஸ்( வயது 23)இவர் பூக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் பூவுடன் சேர்த்து தழை கட்டுவதற்காக செஞ்சி அருகே உள்ள எட்டியதாங்கல் ஏரிக்கு அருள்தாஸ் மற்றும் அவருடன் 5 பேர் கொண்ட நண்பர்கள் சென்று தழைகளை பறித்து கொண்டு இருந்தனர்.பின்னர் அதே ஏரியில் குளித்த போது நீச்சல் தெரியாததால் அருள் தாஸ் ஏரியில்மூழ்கி பலியானார்.இது குறித்து உடனடியாக சக நண்பர்கள் செஞ்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி அருள்தாஸ் உடலை மீட்டனர்.பின்னர் இது குறித்து செஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அருள்தாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • நீச்சல் செய்து ஆசிய சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
    • 11 வயதில் நீச்சல் அடித்துக் கடந்த முதல் ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான சிறுவன் லக்‌ஷய் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், ஐஸ்வர்யா தம்பதிகளின் 11 வயது மகனான லக்ஷய் கிருஷ்ணகுமார், கடலில் 15 கிலோமீட்டர் தூரம் நீச்சல் செய்து, ஆசிய சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ஆசிய கண்டத்திலேயே, 15 கிலோமீட்டர் தொலைவை, 11 வயதில் நீச்சல் அடித்துக் கடந்த முதல் ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான சிறுவன் லக்ஷய் குமார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை நீலாங்கரை முதல் மெரினா வரையிலான கடலில் 15 கிலோமீட்டர் தொலைவை, அவர் 3 மணி நேரம் 18 நிமிடங்களில் கடந்து, ஆசிய சாதனைகள் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

    இதற்கான பாராட்டு விழாவில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு நீச்சல் ஆணையச் செயலாளர் சந்திரசேகரன் மற்றும் நீச்சல் பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு, சாதனை படைத்த சிறுவனை பாராட்டினார்கள்.

    • இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை கடலில் 32 கி.மீ. நீந்தி சாதனை படைத்துள்ளார்.
    • ஏற்கனவே கடலூர் அருகே 5 கி.மீ. தூரம் கடலில் நீந்தி ஜனாதிபதி விருது பெற்றுள்ளார்.

    ராமேசுவரம்:

    இந்தியா-இலங்கை இடையே உள்ள கடல் பகுதியில் நீந்தி பலர் சாதனை படைத்துள்ளனர். இலங்கை தலை மன்னார்-தனுஷ்கோடி இடையேயான பாக் ஜலசந்தி கடற்பகுதியை 1994-ம் ஆண்டு குற்றாலீஸ் வரன் தனது 12 வயதிலும், 2019-ம் ஆண்டு தேனியை சேர்ந்த ஜெய் ஜஸ்வந்த் தனது 10 வயதிலும் நீந்தி கடந்தனர்.

    அதேபோல் ஆட்டி சத்தால் பாதிக்கப்பட்ட மும்பையை சேர்ந்த ஜியாராய் என்ற 13 வயது சிறுமி 2012-ம் ஆண்டு மார்ச் 20-ந்தேதியும், தேனியை சேர்ந்த சினேகன் என்ற 14 வயது சிறுவன் அதே மாதத்தில் 29-ந்தேதி யும் தலைமன்னார்-தனுஷ் கோடி இடையே கடலில் நீந்தி சாதனை படைத்தனர்.

    இவர்களை போன்றே பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் இந்த கடல் பகுதியை நீந்தி கடந்துள்ளனர். இந்நிலையில் சென்னையை சேர்ந்த மாற்றுத்திறனாளி வாலிபர் ஒருவர், இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை கடலில் 32 கி.மீ. நீந்தி சாதனை படைத்துள்ளார்.

    சென்னை வடபழனியை சேர்ந்த ராஜசேகரன்-வனிதா தம்பதியரின் மகன் ஸ்ரீராம் சீனிவாஸ்(வயது29). கால், கைகள் செயல்திறன் குறைந்த மாற்றுத்திறனாளி வாலிபரான இவர் நீச்சலில் ஆர்வம் கொண்டவர். தனது 4 வயதில் இருந்தே நீச்சல் பயிற்சி பெற்று வரும் இவர், அதில் பல சாதனைகளை படைக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வந்தார்.

    ஏற்கனவே கடலூர் அருகே 5 கி.மீ. தூரம் கடலில் நீந்தி ஜனாதிபதி விருது பெற்றுள்ளார். இந்த நிலையில் இலங்கை தலை மன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை கடலில் நீந்தி சாதனை படைக்க முடிவு செய்தார். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தனது பெற்றோர் மற்றும் நீச்சல் பயிற்சியாளர்கள் உள்ளிட்டோருடன் ராமேசு வரத்திற்கு வந்தார்.

    அவர் தனது சாதனை பயணத்தை தொடங்குவதற்காக இலங்கை தலை மன்னார் ஊர்முனை கடல் பகுதிக்கு நேற்று முன்தினம் சென்றார். அன்று மாலை 5 மணிக்கு மாற்றுத்திறனாளி வாலிபர் ஸ்ரீராம் சீனிவாஸ் தலைமன்னாரில் இருந்து நீச்சல் அடிக்க தொடங்கினார்.

    தொடர்ந்து இரவிலும் விடாமல் நீந்திய அவர், நேற்று மதியம் 1.30 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு வந்து சேர்ந்தார். தலை மன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான 32 கி.மீ. தூர கடல் பகுதியை 20 மணிநேரம் 20 நிமிடத்தில் கடந்துள்ளார்.

    இதன் மூலம் இந்த கடல் பகுதியை கடந்த முதல் மாற்றுத்திறனாளி வாலிபர் என்ற சாதனையை அவர் படைத்தார். அவருக்கு கொல்கத்தாவை சேர்ந்த யுனிவர்சல் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பின் சார்பில் சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

    சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை மாற்றுத்திறனாளி வாலிபர் ஸ்ரீராம் சீனிவாசுக்கு ராமேசுவரம் துணை போலீஸ் சூப்பிரண்டு உமாதேவி வழங்கி பாராட்டினார். சாதனை படைத்த வாலிபரை அவரது பெற்றோர், உறவினர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். மேலும் பாரதீய ஜனதா கட்சியினரும் நேரில் சென்று வாலிபரை பாராட்டினர்.

    தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை கடலில் நீந்தி சாதனை படைத்த மாற்றுத்திறனாளி வாலிபர் ஸ்ரீராம் சீனிவாசுக்கு அதிகாரிகள், அரசியல் கட்சியினர், விளையாட்டு ஆர்வலர்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

    • சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் போட்டி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.
    • இதில் 75 மாணவிகள் இலக்கை நோக்கி நீச்சல் அடித்து திறமையை வெளிப்படுத்தினர்.

    சேலம்:

    தமிழக பள்ளிக்கல்வித்–துறை சார்பில் சேலம் வருவாய் மாவட்ட அளவில் பள்ளி மாணவிகளுக்கு சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் போட்டி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் 14, 17,19 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கு 100 மீட்டர், 400 மீட்டர் உள்பட 10 பிரிவுகளில் நடத்தப்பட்டன. இதில் 75 மாணவிகள் இலக்கை நோக்கி நீச்சல் அடித்து திறமையை வெளிப்படுத்தினர்.

    ஒவ்வொரு வயதுக்குட்–பட்ட பிரிவுகளில் இருந்து முதல் 3 இடங்களை பிடித்த 30 பேர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில போட்டிக்கு தகுதி பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கவினா சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவிகள் மாநில நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
    • வட்டார அளவிலான சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவ,மாணவிகளுக்கான நீச்சல் போட்டி நடந்தது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள பாம்பூர் கவினா இண்டர் நேஷனல் சி.பி.எஸ்.சி. பள்ளியில் தென் மாவட்ட5-வது குறு வட்டார அளவிலான சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவ,மாணவிகளுக்கான நீச்சல் போட்டி நடந்தது. தென் பொதுவக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் இளமுருகு இளஞ்செழியன் தொடங்கி வைத்தார். பள்ளியின் நிறுவனர் கண்ணதாசன் பாண்டியன், தாளாளர் ஹேமலதா கண்ணதாசன், விளங்குளத்தூர் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தனர்.

    முதல்வர் சுமிசுதிர் வரவேற்றார். மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்ட பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில் கவினா பள்ளியைச் சேர்ந்த 12 வயது பிரிவு மாணவி ஹேமதர்ஷினி, 14 வயது பிரிவு சுரேகா, 17 வயது பிரிவு ஜோஷிதா ஆகியோர் முதலிடம் பெற்று 3 தங்கப் பதக்கங்களை பெற்றனர்.மேலும் இந்த பள்ளி மாணவ, மாணவிகள் 13 வெள்ளி பதக்கங்கள், 8 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 22 பதக்கங்களை வென்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான நீச்சல் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.

    அவர்களையும், நீச்சல் பயிற்சியாளர்கள் விஜயேந்திரன், சரவணன்,உடற்கல்வி ஆசிரியை சத்யா ஆகியோரையும் ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகத்தினரும், பாராட்டினர்.

    • பதக்கப் பட்டியலில் சர்வீசஸ் அணி தொடர்ந்து முதலிடம்.
    • 22 தங்கம் பதக்கங்களுடன் தமிழகத்திற்கு 5வது இடம்.

    அகமதாபாத்:

    36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் 6 நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் ஃப்ரீஸ்டைலில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒலிம்பிக் வீரர் ஸ்ரீஹரி நடராஜ் தங்கப் பதக்கம் வென்றார். இது அவர் வெல்லும் ஆறாவது தங்கப்பதக்கம் ஆகும். 50.41 வினாடிகளில் இலக்கை அடைந்த அவர் புதிய தேசிய சாதனையை படைத்தார்.

    தேசிய விளையாட்டுப் போட்டி பதக்கப் பட்டியலில், சர்வீசஸ் அணி இதுவரை தங்கத்தை 45 தங்கம், 31 வெள்ளி, 28 வெண்கல பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. 30 தங்கம், 25 வெள்ளி, 28 வெண்கலம் உள்பட அரியானா இரண்டாவது இடத்திலும், 28 தங்கம், 28 வெள்ளி, 54 வெண்கல பதக்கத்துடன் மகாராஷ்டிரா மூன்றாவது இடத்திலும் நீடிக்கின்றன. தமிழகம் 22 தங்கம், 21 வெள்ளி, 22 வெண்கலப் பதக்களுடன் 5 இடத்தில் உள்ளது.

    • போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆய்வு
    • நன்கு நீச்சல் தெரிந்த மீனவ இளைஞர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் செயல்படும் ஊர்க்காவல் படையில் புதிதாக 35 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

    குறிப்பாக கடலோர பாதுகாப்பு போலீஸ் நிலையங்களில் இணைந்து பணிபுரிய நன்கு நீச்சல் தெரிந்த மீனவ இளைஞர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி விண்ணப்பித்த இளைஞர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் பரிசோதனை ஆகியவை நாகர்கோவிலில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது.

    அப்போது விண்ணப்பித்தவர்களின் உயரம், எடை ஆகியவை சரிபார்க்கப்பட்டன. சான்றிதழ்களும் ஆய்வு செய்யப்பட்ட இந்த பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கூடுதல் போலீஸ் சூப் பிரண்டு ஈஸ்வரன் உடன் இருந்தார்.

    ×