என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வியாபாரிகளுடன் போலீசார் ஆலோசனை
Byமாலை மலர்10 April 2022 9:46 AM GMT (Updated: 10 April 2022 9:46 AM GMT)
ஆழ்வார்திருநகரி காவல்நிலையத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தென்திருப்பேரை:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரிலும், ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் ஆலோசனையின் பேரிலும் ஆழ்வார்திருநகரி காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் பெட்டிக்கடை மற்றும் கடைகளில் சட்டவிரோதமாக புகையிலை, குட்கா, கஞ்சா பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்யும் பொருட்டு ஆழ்வார்திருநகரியில் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காவல் நிலையத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை, பான்பராக் குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்யவோ பதுங்கி வைக்கவோ கூடாது என்றும், 100சதவீத தடை செய்ய வேண்டும் என்றும் மீறினால் சட்டப்படி அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டு குற்றவியல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினர்.
கூட்டத்தில் ஆழ்வார் திருநகரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வன் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் சட்டத்திற்கு புறம்பாக புகையிலை பொருட்களை விற்பனை செய்ய மாட்டோம் எனவும், அனைவரும் ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறினார்கள்.
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரிலும், ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் ஆலோசனையின் பேரிலும் ஆழ்வார்திருநகரி காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் பெட்டிக்கடை மற்றும் கடைகளில் சட்டவிரோதமாக புகையிலை, குட்கா, கஞ்சா பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்யும் பொருட்டு ஆழ்வார்திருநகரியில் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காவல் நிலையத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை, பான்பராக் குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்யவோ பதுங்கி வைக்கவோ கூடாது என்றும், 100சதவீத தடை செய்ய வேண்டும் என்றும் மீறினால் சட்டப்படி அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டு குற்றவியல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினர்.
கூட்டத்தில் ஆழ்வார் திருநகரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வன் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் சட்டத்திற்கு புறம்பாக புகையிலை பொருட்களை விற்பனை செய்ய மாட்டோம் எனவும், அனைவரும் ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X