என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நகையை ஒப்படைக்க லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க செயலாளர் சஸ்பெண்டு சேலம் மண்டல இணைப்பதிவாளர் உத்தரவு
Byமாலை மலர்28 March 2022 8:17 AM GMT (Updated: 28 March 2022 8:17 AM GMT)
நகையை ஒப்படைக்க லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க செயலாளரை சஸ்பெண்டு செய்து சேலம் மண்டல இணைப்பதிவாளர் உத்தரவிட்டு உள்ளார்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள 252 கூட்டுறவு சங்கங்களில் 5 பவுனுக்கு கீழ் நகை கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் மற்றும் நகை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், காடையாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி பெற்ற பயனாளி ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு நகை மதிப்பீட்டாளர் சான்றிதழ் சரிபார்க்க சென்றார்.
அப்போது, பயனாளியிடம் நகையை திரும்ப ஒப்படைப்பதற்கு கூட்டுறவு சங்க செயலாளர் விஜயகுமார் (வயது 56) என்பவர் ரூ.8 ஆயிரம் லஞ்சமாக வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து ஓமலூர் சரக துணைப்பதிவாளர் சுவேதா நடத்திய விசாரணையில், செயலாளர் விஜயகுமார் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து காடையாம்பட்டி கூட்டுறவு சங்க செயலாளர் விஜயகுமாரை பணி இடைநீக்கம் செய்து சேலம் மண்டல இணைப்பதிவாளர் ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X