என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தைரியம் இருப்பதால் பா.ஜனதா தனித்து போட்டி- வாக்களித்த பிறகு குஷ்பு பேட்டி
Byமாலை மலர்19 Feb 2022 4:22 AM GMT (Updated: 19 Feb 2022 4:22 AM GMT)
யார் ஜெயிக்க வேண்டும் என்று மட்டும் பார்க்கக்கூடாது என்றும் யார் ஜெயித்தால் நல்லது செய்வார்கள் என்று பார்த்து வாக்களிக்க வேண்டும் என்றும் குஷ்பு கூறியுள்ளார்.
சென்னை:
பா.ஜனதா நிர்வாகியான நடிகை குஷ்பு மந்தைவெளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் யாரும் எந்த வேலையும் செய்வதில்லை என்று மக்கள் பிரதிநிதிகளை மட்டும் குறை சொல்லக்கூடாது. முதலில் எல்லோரும் வாக்களிக்க வேண்டும். வாக்களிக்காமல் வீட்டிலேயே இருந்து விட்டு குறை மட்டுமே சொல்லக்கூடாது.
யார் ஜெயிக்க வேண்டும் என்று மட்டும் பார்க்கக்கூடாது. யார் ஜெயித்தால் நல்லது செய்வார்கள் என்று பார்த்து வாக்களிக்க வேண்டும்.
இது தேர்தல் விதிமுறை அமலில் இருக்கும் நேரம். எனவே நீங்கள் கேட்கும் அரசியல் விஷயங்களை என்னால் பேச முடியாது.
எங்கள் கட்சிக்கு தைரியம் இருப்பதால் தனித்து போட்டியிடுகிறது. வெற்றி வாய்ப்பை பற்றி அப்புறம் பார்க்கலாம்.
3-வது இடமா? 2-வது இடமா? என்பதை பற்றியெல்லாம் கருத்து சொல்ல முடியாது.
ஏற்கனவே இப்படி பேசி பேசியே எங்கள் எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் சட்டமன்றத்துக்கு சென்று விட்டார்கள் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
பா.ஜனதா நிர்வாகியான நடிகை குஷ்பு மந்தைவெளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் யாரும் எந்த வேலையும் செய்வதில்லை என்று மக்கள் பிரதிநிதிகளை மட்டும் குறை சொல்லக்கூடாது. முதலில் எல்லோரும் வாக்களிக்க வேண்டும். வாக்களிக்காமல் வீட்டிலேயே இருந்து விட்டு குறை மட்டுமே சொல்லக்கூடாது.
யார் ஜெயிக்க வேண்டும் என்று மட்டும் பார்க்கக்கூடாது. யார் ஜெயித்தால் நல்லது செய்வார்கள் என்று பார்த்து வாக்களிக்க வேண்டும்.
இது தேர்தல் விதிமுறை அமலில் இருக்கும் நேரம். எனவே நீங்கள் கேட்கும் அரசியல் விஷயங்களை என்னால் பேச முடியாது.
எங்கள் கட்சிக்கு தைரியம் இருப்பதால் தனித்து போட்டியிடுகிறது. வெற்றி வாய்ப்பை பற்றி அப்புறம் பார்க்கலாம்.
3-வது இடமா? 2-வது இடமா? என்பதை பற்றியெல்லாம் கருத்து சொல்ல முடியாது.
ஏற்கனவே இப்படி பேசி பேசியே எங்கள் எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் சட்டமன்றத்துக்கு சென்று விட்டார்கள் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... முதல் டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவை சுருட்டி அபார வெற்றி பெற்றது நியூசிலாந்து
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X