என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சாத்தான்குளத்தில் குளத்தில் மூழ்கி முதியவர் பலி
Byமாலை மலர்20 Jan 2022 10:58 AM GMT (Updated: 20 Jan 2022 10:58 AM GMT)
சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுன்னாகுடியை சேர்ந்த முதியவர் ஒருவர் குளத்திற்கு மீன் பிடிக்க சென்ற இடத்தில் தவறி விழுந்து மூழ்கி பலியானார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுன்னாக்குடியை சேர்ந்தவர் ராஜகோபால்(வயது 60). இவர் அங்குள்ள பெரியகுளத்தில் மீன் பிடிப்பதற்காக நேற்று முன்தினம் குளத்தில் வலை விரித்து இருந்தார்.
நேற்று காலை வலையில் மீன் சிக்கி உள்ளதா என்பதை பார்ப்பதற்காக குளத்தில் இறங்கிய அவர் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். இதனால் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் குளத்திற்கு வந்து பார்த்தபோது அவரை காணவில்லை. உடனே சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக் கப்பட்டது.தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் வீரர்கள் வந்து குளத்தில் தேடி பார்த்தனர்.ஆனால் அவர் உடலை மீட்க முடியவில்லை.
இன்று காலை 2-வது நாளாக தேடி பார்த்தனர். அப்போது ராஜகோபால் உடலை மீட்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X