search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டி.டி.வி.தினகரன்
    X
    டி.டி.வி.தினகரன்

    அம்மா உணவகங்களை மூடி ஏழை- எளிய மக்களின் வயிற்றில் அடிக்க வேண்டாம்: டி.டி.வி.தினகரன்

    ஜெயலலிதா மீதான அரசியல் வெறுப்புணர்வால், அம்மா உணவகங்களை மூடி அவற்றால் பசியாறும் ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்க வேண்டாம் என டி.டி.வி.தினகரன் டுவிட்டரில் கூறியுள்ளார்.
    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    “அம்மா உணவகங்களை மூடினால் என்ன?” என்று சட்டப்பேரவையிலேயே தி.மு.க.வின் மூத்த அமைச்சர் பேசியிருப்பது அக்கட்சியின் அப்பட்டமான அரசியல் காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது.

    இதன் மூலம் ‘அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்’ என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்பு கூறியிருந்தது வெறும் வெளிவே‌ஷம் என்பது அம்பலமாகி இருக்கிறது. வழி வழியாக வரும் தி.மு.க.வின் மக்கள் விரோத செயல்பாடுகளின் தொடர்ச்சிதான் அமைச்சரின் இந்தப் பேச்சு. ஜெயலலிதா மீதான அரசியல் வெறுப்புணர்வால், அம்மா உணவகங்களை மூடி அவற்றால் பசியாறும் ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்க வேண்டாம் என தி.மு.க. அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×