என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பூசாரிகளுக்கு புத்தாடைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Byமாலை மலர்4 Jan 2022 8:49 AM GMT (Updated: 4 Jan 2022 8:49 AM GMT)
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளிலிருந்து பணிக்கு வரும் போது பணியாளர்கள் அணிந்து வரும் வகையில் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட்டது.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள், பூசாரிகளுக்கு புத்தாடைகளையும், திருக்கோவில் பணியாளர்களுக்கு நபர் ஒருவருக்கு 2 எண்ணிக்கையிலான சீருடைகளையும் வழங்கிடும் அடையாளமாக 12 நபர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகளை வழங்கினார்.
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறையின் 2021-22-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருக்கோவில்களில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் பணிப் பட்டியலின்படி பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள், பூசாரிகளுக்கு புத்தாடையும் மற்றும் திருக்கோவில் பணியாளர்களுக்கு நபர் ஒருவருக்கு 2 எண்ணிக்கையிலான சீருடைகளும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
திருக்கோவில்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும் திருக்கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில், அர்ச்சகர், பட்டாச்சாரியார், பூசாரிகளுக்கு மயில் கண் பார்டர் பருத்தி வேட்டியும், பெண் பூசாரி மற்றும் திருக்கோவிலில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு அரக்கு நிறத்தில் மஞ்சள் நிற பார்டருடன் கூடிய புடவையும், ஆண் பணியாளர்களுக்கு பழுப்பு நிற கால்சட்டை மற்றும் சந்தன நிற மேற்சட்டை துணியும் வழங்கப்படுகிறது. இதன்மூலம், 36,684 திருக்கோவில்களில் பணிபுரியும் சுமார் 52,803 பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளிலிருந்து பணிக்கு வரும் போது பணியாளர்கள் அணிந்து வரும் வகையில் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அற நிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்தரமோகன், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர் இரா. கண்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள், பூசாரிகளுக்கு புத்தாடைகளையும், திருக்கோவில் பணியாளர்களுக்கு நபர் ஒருவருக்கு 2 எண்ணிக்கையிலான சீருடைகளையும் வழங்கிடும் அடையாளமாக 12 நபர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகளை வழங்கினார்.
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறையின் 2021-22-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருக்கோவில்களில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் பணிப் பட்டியலின்படி பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள், பூசாரிகளுக்கு புத்தாடையும் மற்றும் திருக்கோவில் பணியாளர்களுக்கு நபர் ஒருவருக்கு 2 எண்ணிக்கையிலான சீருடைகளும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
திருக்கோவில்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும் திருக்கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில், அர்ச்சகர், பட்டாச்சாரியார், பூசாரிகளுக்கு மயில் கண் பார்டர் பருத்தி வேட்டியும், பெண் பூசாரி மற்றும் திருக்கோவிலில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு அரக்கு நிறத்தில் மஞ்சள் நிற பார்டருடன் கூடிய புடவையும், ஆண் பணியாளர்களுக்கு பழுப்பு நிற கால்சட்டை மற்றும் சந்தன நிற மேற்சட்டை துணியும் வழங்கப்படுகிறது. இதன்மூலம், 36,684 திருக்கோவில்களில் பணிபுரியும் சுமார் 52,803 பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளிலிருந்து பணிக்கு வரும் போது பணியாளர்கள் அணிந்து வரும் வகையில் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அற நிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்தரமோகன், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர் இரா. கண்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X