search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யும் பகுதி
    X
    சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யும் பகுதி

    தமிழகத்தில் நுழைந்தது ஒமைக்ரான் -சென்னையை சேர்ந்தவருக்கு பாதிப்பு

    கேரளாவில் புதிதாக 4 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமைக்ரான் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. முதலில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் டாக்டர் உள்பட 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, கேரளா, ஆந்திரா, சண்டிகர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் ஒமைக்ரானின் பாதிப்பு ஏற்பட்டது.  

    இந்நிலையில் தமிழகத்திலும் ஒமைக்ரான் வைரஸ் நுழைந்துள்ளது. நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த பயணி ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

    மா.சுப்பிரமணியன்

    இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:  

    ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ள நபர் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார். லேசான ஒமைக்ரான் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.  ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த 8 பேரில் ஒரு குழந்தை தவிர மற்ற ஏழு பேரும் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள். இது தவிர வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், கேரளாவில் இன்று மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று மேலும் 4  நபர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் பாதிப்பு 32 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. 

    மகாராஷ்டிராவில் 32, ராஜஸ்தானில் 17,  டெல்லியில் 6, குஜராத்தில் 4, தெலுங்கானாவில் 3, ஆந்திராவில் 1, கர்நாடகாவில் 3, கேரளாவில் 5, மேற்கு வங்காளத்தில் 1, தமிழகத்தில் 1 என ஒமைக்ரான் தொற்று பதிவாகி உள்ளது. 
    Next Story
    ×