search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தஞ்சை அருகே வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை

    தஞ்சை அருகே வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வல்லம்:

    தஞ்சை அருகே சீராளுர் தெற்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் பாலசுப்பிரமணியன் (வயது 19). இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பால சுப்பிரமணியன் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (வி‌ஷம்) எடுத்து குடித்துள்ளார். மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலசுப் பிரமணியன் இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ்செல்வன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×