என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தலைமை ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை- கல்வி அதிகாரி பணியிடை நீக்கம்
Byமாலை மலர்9 Oct 2021 3:38 AM GMT (Updated: 9 Oct 2021 3:38 AM GMT)
வேடசந்தூரில் சமூக வலைத்தளம் மூலம் தலைமை ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்வி அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு 3 தலைமை ஆசிரியைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தனர். அவர்கள் மாவட்ட கல்வி அலுவலர் கீதாவை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.
அதில் வேடசந்தூர் வட்டார கல்வி அலுவலர் அருண்குமார் தனது செல்போனில் இருந்து வாட்ஸ்-அப், முகநூல் ஆகிய சமூக வலைத்தளம் மூலம் தகவல் அனுப்பி தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி இருந்தனர். இதற்கான ஆதாரங்களையும் அவர்கள் சமர்ப்பித்தனர். இதனை தொடர்ந்து வட்டார கல்வி அலுவலர் அருண்குமாரை நேரில் அழைத்து மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார்.
பின்னர் விசாரணை அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கருப்பசாமியிடம் அவர் சமர்ப்பித்தார். அதன்பேரில் அவர் இருதரப்பினரிடமும் மேல் விசாரணை நடத்தினார். இதையடுத்து வட்டார கல்வி அலுவலர் அருண்குமாரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் நேற்று உத்தரவிட்டார். இந்த சம்பவம் கல்வி அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு 3 தலைமை ஆசிரியைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தனர். அவர்கள் மாவட்ட கல்வி அலுவலர் கீதாவை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.
அதில் வேடசந்தூர் வட்டார கல்வி அலுவலர் அருண்குமார் தனது செல்போனில் இருந்து வாட்ஸ்-அப், முகநூல் ஆகிய சமூக வலைத்தளம் மூலம் தகவல் அனுப்பி தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி இருந்தனர். இதற்கான ஆதாரங்களையும் அவர்கள் சமர்ப்பித்தனர். இதனை தொடர்ந்து வட்டார கல்வி அலுவலர் அருண்குமாரை நேரில் அழைத்து மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார்.
பின்னர் விசாரணை அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கருப்பசாமியிடம் அவர் சமர்ப்பித்தார். அதன்பேரில் அவர் இருதரப்பினரிடமும் மேல் விசாரணை நடத்தினார். இதையடுத்து வட்டார கல்வி அலுவலர் அருண்குமாரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் நேற்று உத்தரவிட்டார். இந்த சம்பவம் கல்வி அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X