search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சுசீந்திரம் அருகே வீடு புகுந்து திருடிய 3 வாலிபர்கள் கைது

    சுசீந்திரம் அருகே வீடு புகுந்து திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    என்.ஜி.ஓ.காலனி:

    சுசீந்திரம் அருகே மேல கிருஷ்ணன்புதூர் சியோன் புரத்தைச் சேர்ந்தவர் ஜோசப்.

    இவர், சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு தங்கை வீட்டிற்கு சென்றார். வீட்டிற்கு திரும்ப வந்தபோது வீட்டின் பின்னால் 3 மர்மநபர்கள் நின்று கொண்டிருந்தனர். ஜோசப்பை பார்த்ததும் அவர்கள் தப்பியோடி விட்டனர். ஜோசப் வீட்டின்உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.3,500 ரொக்கப்பணம் மற்றும் செல்போன் திருடப்பட்டிருந்தது. இது குறித்து அவர் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    இந்த நிலையில் நேற்றிரவு அந்த பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்ற 3 நபர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் என்.ஜி.ஓ. காலனி வெள்ளாளன் விளையைச் சேர்ந்த அருண் (வயது 23), ஒத்தக்கடையைச் சேர்ந்த தனபால் (19) மற்றொருவர் 15 வயது சிறுவன் ஆவான். இவர்கள் 3 பேரும் ஜோசப் வீட்டில் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

    Next Story
    ×