என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சுசீந்திரம் அருகே வீடு புகுந்து திருடிய 3 வாலிபர்கள் கைது
என்.ஜி.ஓ.காலனி:
சுசீந்திரம் அருகே மேல கிருஷ்ணன்புதூர் சியோன் புரத்தைச் சேர்ந்தவர் ஜோசப்.
இவர், சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு தங்கை வீட்டிற்கு சென்றார். வீட்டிற்கு திரும்ப வந்தபோது வீட்டின் பின்னால் 3 மர்மநபர்கள் நின்று கொண்டிருந்தனர். ஜோசப்பை பார்த்ததும் அவர்கள் தப்பியோடி விட்டனர். ஜோசப் வீட்டின்உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.3,500 ரொக்கப்பணம் மற்றும் செல்போன் திருடப்பட்டிருந்தது. இது குறித்து அவர் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில் நேற்றிரவு அந்த பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்ற 3 நபர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் என்.ஜி.ஓ. காலனி வெள்ளாளன் விளையைச் சேர்ந்த அருண் (வயது 23), ஒத்தக்கடையைச் சேர்ந்த தனபால் (19) மற்றொருவர் 15 வயது சிறுவன் ஆவான். இவர்கள் 3 பேரும் ஜோசப் வீட்டில் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்