என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் 70 சதவீத பள்ளி மாணவர்கள் வருகை
Byமாலை மலர்2 Sep 2021 5:10 AM GMT (Updated: 2 Sep 2021 6:37 AM GMT)
பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட்டதால் பஸ்-ரெயில்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. அரசு போக்குவரத்து கழகங்கள் கூடுதல் பஸ்களை இயக்கி வருகின்றன.
சென்னை:
தமிழகம் முழுவதும் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. 9, 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறுகின்றன.
கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்படுகிறது. சென்னையில் அரசு, உதவி பெறும், மாநகராட்சி பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வகுப்புகளுக்கு சென்றனர்.
தமிழகம் முழுவதும் முதல் நாளில் 70 சதவீதம் பேர் பள்ளிக்கு வந்திருந்தனர். சென்னையிலும் 70 சதவீத மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்திருந்ததாக முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் தெரிவித்தார்.
முதல் நாள் என்பதால் ஒருசில பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அனுப்புவதில் சுணக்கம் காட்டியிருக்கலாம். சிலர் வெளியூர் சென்றிருப்பதால் பள்ளிக்கு வராத நிலை ஏற்பட்டது. அதனால் அடுத்து வருகின்ற ஒருசில நாட்களில் மாணவர்களின் வருகை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட்டதால் பஸ்-ரெயில்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று முதல் அனைத்து பஸ்களும் நிரம்பி வழிந்தன. இதுவரையில் காலியாக ஓடிய பஸ்கள் நேற்று நிரம்பி காணப்பட்டன.
பயணிகள் நின்று பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது. இதனால் அரசு போக்குவரத்து கழகங்கள் கூடுதல் பஸ்களை இயக்கி வருகின்றன.
சென்னையில் மின்சார ரெயில்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாணவர்கள் இலவச பஸ் பாஸ் மூலம் பயணம் செய்தனர்.
தமிழகம் முழுவதும் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. 9, 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறுகின்றன.
கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்படுகிறது. சென்னையில் அரசு, உதவி பெறும், மாநகராட்சி பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வகுப்புகளுக்கு சென்றனர்.
காலை 9 மணி முதல் மாலை 3.30 மணி வரை பள்ளி வளாகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு இருந்தனர். சக மாணவ-மாணவிகளை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகம் முழுவதும் முதல் நாளில் 70 சதவீதம் பேர் பள்ளிக்கு வந்திருந்தனர். சென்னையிலும் 70 சதவீத மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்திருந்ததாக முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் தெரிவித்தார்.
முதல் நாள் என்பதால் ஒருசில பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அனுப்புவதில் சுணக்கம் காட்டியிருக்கலாம். சிலர் வெளியூர் சென்றிருப்பதால் பள்ளிக்கு வராத நிலை ஏற்பட்டது. அதனால் அடுத்து வருகின்ற ஒருசில நாட்களில் மாணவர்களின் வருகை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட்டதால் பஸ்-ரெயில்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று முதல் அனைத்து பஸ்களும் நிரம்பி வழிந்தன. இதுவரையில் காலியாக ஓடிய பஸ்கள் நேற்று நிரம்பி காணப்பட்டன.
பயணிகள் நின்று பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது. இதனால் அரசு போக்குவரத்து கழகங்கள் கூடுதல் பஸ்களை இயக்கி வருகின்றன.
சென்னையில் மின்சார ரெயில்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாணவர்கள் இலவச பஸ் பாஸ் மூலம் பயணம் செய்தனர்.
இதையும் படியுங்கள்...கடந்த மாதம் 22.75 லட்சம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X