என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
என்னை புகழ்ந்து பேசினால் நடவடிக்கை- தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
Byமாலை மலர்28 Aug 2021 8:56 AM GMT (Updated: 28 Aug 2021 9:52 AM GMT)
தி.மு.க. உறுப்பினர்கள் என்னையும், தலைவர்களையும் புகழ்ந்து பேசுவதை குறைத்துவிட்டு மானிய கோரிக்கையை பற்றி மட்டுமே பேச வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை:
சட்டசபையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய கடலூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அய்யப்பன் நீண்ட நேரமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மறைந்த தலைவர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரை அதிக அளவில் புகழ்ந்து பேசினார்.
சுமார் 5 நிமிடங்களுக்கு மேலாக மு.க.ஸ்டாலினை பற்றி பல்வேறு வார்த்தைகளை கூறி அவர் புகழ்ந்து பேசியபடியே இருந்தார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு எழுந்து பேசினார். அவர் பேசியதாவது:
எனவே இருப்பினும் இன்று உறுப்பினர் தொடர்ந்து புகழ்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார். இது தொடர்ந்தால் நான் நடவடிக்கை எடுக்க வேண்டியது இருக்கும். எனவே தி.மு.க. உறுப்பினர்கள் என்னையும், தலைவர்களையும் புகழ்ந்து பேசுவதை குறைத்துவிட்டு மானிய கோரிக்கையை பற்றி மட்டுமே பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதன் பிறகு தனது பேச்சை தொடர்ந்த தி.மு.க. உறுப்பினர் அய்யப்பன் மீண்டும் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிவிட்டு அமர்ந்தார்.
சட்டசபையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய கடலூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அய்யப்பன் நீண்ட நேரமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மறைந்த தலைவர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரை அதிக அளவில் புகழ்ந்து பேசினார்.
சுமார் 5 நிமிடங்களுக்கு மேலாக மு.க.ஸ்டாலினை பற்றி பல்வேறு வார்த்தைகளை கூறி அவர் புகழ்ந்து பேசியபடியே இருந்தார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு எழுந்து பேசினார். அவர் பேசியதாவது:
தி.மு.க. உறுப்பினர் அய்யப்பன் என்னைப்பற்றி புகழ்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார். நான் நேற்றே இதுபோன்ற புகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளேன்.
எனவே இருப்பினும் இன்று உறுப்பினர் தொடர்ந்து புகழ்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார். இது தொடர்ந்தால் நான் நடவடிக்கை எடுக்க வேண்டியது இருக்கும். எனவே தி.மு.க. உறுப்பினர்கள் என்னையும், தலைவர்களையும் புகழ்ந்து பேசுவதை குறைத்துவிட்டு மானிய கோரிக்கையை பற்றி மட்டுமே பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதன் பிறகு தனது பேச்சை தொடர்ந்த தி.மு.க. உறுப்பினர் அய்யப்பன் மீண்டும் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிவிட்டு அமர்ந்தார்.
இதையும் படியுங்கள்...தமிழகத்தில் டெல்டா வகை கொரோனா வைரசால் 80 சதவீதம் பேர் பாதிப்பு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X