என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூடங்குளத்தில் கோழிப்பண்ணையில் நஷ்டத்தால் இளம்பெண் தற்கொலை
Byமாலை மலர்28 July 2021 11:30 AM GMT (Updated: 28 July 2021 11:30 AM GMT)
கூடங்குளத்தில் கோழிப்பண்ணையில் நஷ்டத்தால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
ஆரல்வாய் மொழியை சேர்ந்தவர் மனோரஞ்சன் மண்டல். இவரது மனைவி அனுரஞ்சனி (வயது 28). இவர்களுக்கு சொந்தமான தோட்டம் கூடங்குளம் பகுதியில் உள்ளது.
இதில் கோழிப்பண்ணை அமைப்பதற்காக அனுரஞ்சனி வங்கியில் கடன் வாங்கி கோழிப்பண்ணை நடத்தி வந்தார். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக சரிவர விற்பனை ஆகாததால் அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வங்கியின் கடனுக்கு வட்டி, தவணை தொகை செலுத்தமுடியாமல் தவித்து வந்தார்.
இதில் மனமுடைந்த அவர் தோட்டத்தில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து குடியிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X