search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கூடங்குளத்தில் கோழிப்பண்ணையில் நஷ்டத்தால் இளம்பெண் தற்கொலை

    கூடங்குளத்தில் கோழிப்பண்ணையில் நஷ்டத்தால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    ஆரல்வாய் மொழியை சேர்ந்தவர் மனோரஞ்சன் மண்டல். இவரது மனைவி அனுரஞ்சனி (வயது 28). இவர்களுக்கு சொந்தமான தோட்டம் கூடங்குளம் பகுதியில் உள்ளது.

    இதில் கோழிப்பண்ணை அமைப்பதற்காக அனுரஞ்சனி வங்கியில் கடன் வாங்கி கோழிப்பண்ணை நடத்தி வந்தார். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக சரிவர விற்பனை ஆகாததால் அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வங்கியின் கடனுக்கு வட்டி, தவணை தொகை செலுத்தமுடியாமல் தவித்து வந்தார்.

    இதில் மனமுடைந்த அவர் தோட்டத்தில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து குடியிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×