search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    திருவள்ளூர் அருகே லாரி கவிழ்ந்து தொழிலாளி பலி

    லாரியின் பின்னால் அமர்ந்து வந்த சரக்கு ஏற்றும் தொழிலாளியான கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த மணி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
    திருவள்ளூர்:

    சேலத்தில் இருந்து லாரி ஒன்று சரக்குகளை ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் வழியாக சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த லாரி நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த நரசிங்கபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வயலில் கவிழ்ந்தது.

    இதில் லாரியின் பின்னால் அமர்ந்து வந்த சரக்கு ஏற்றும் தொழிலாளியான கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த மணி (வயது 49) கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். லாரி டிரைவர் காயமின்றி தப்பினார். இதை பார்த்த அங்கு இருந்தவர்கள் உடனடியாக காயம் அடைந்த மணியை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மணி பரிதாபமாக இறந்து போனார்.

    இது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×