என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாபநாசம் அருகே கொத்தனாரை தாக்கிய 3 பேர் கைது
Byமாலை மலர்26 Jun 2021 10:30 AM GMT (Updated: 26 Jun 2021 10:30 AM GMT)
பாபநாசம் அருகே கொத்தனாரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாபநாசம்:
பாபநாசம் அருகே ரெங்கநாதபுரம் மணக்குடி ஏரி தெருவில் வசித்து வருபவர் விஜய் (வயது 30) கொத்தனார். சம்பவத்தன்று விஜய் தனது வீட்டின் சந்து பகுதியில் மழைநீர் தேங்கி இருப்பதால் பாதை உருவாக்கி தண்ணீரை வெளியேற்றி அப்புறப்படுத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டில் வசிக்கும் தர்மராஜ் (64) தனது மகன்கள் ராஜா (36), சிலம்பரசன் (32) ஆகியோருடன் சேர்ந்து விஜயை கட்டையால் அடித்து உதைத்து தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த விஜய் பாபநாசம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் பாபநாசம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இளமாறன் வழக்குப்பதிவு செய்து தர்மராஜ் அவரது மகன்கள் ராஜா, சிலம்பரசன் ஆகிய 3 பேரையும் கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X