search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    வல்லம், செங்கிப்பட்டியில் ஊரடங்கை மீறிய 11 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

    வல்லம், செங்கிப்பட்டியில் ஊரடங்கை மீறிய 11 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    வல்லம்:

    தஞ்சையை அடுத்துள்ள செங்கிப்பட்டி கடைவீதி பகுதியில் செங்கிப்பட்டி போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி தேவையின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்த 4 பேரை போலீசார் பிடித்தனர். இதுகுறித்து 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் 4 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    அதே போல் தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் உள்ள அற்புதாபுரம் சோதனை சாவடி அருகே நேற்று வல்லம் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வந்தனர்.

    அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்த 7 பேரை போலீசார் பிடித்தனர். இதுகுறித்து 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் 7 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×