என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செருப்பு அணியாத பாஜக எம்எல்ஏ- சட்டசபையில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்
Byமாலை மலர்23 Jun 2021 2:50 AM GMT (Updated: 23 Jun 2021 2:50 AM GMT)
கன்னியாகுமரி மாவட்ட மக்களின் அன்பை பெற்றவராக விளங்கி வரும் எம்.ஆர். காந்தி, தற்போது முதல் முறையாக சட்டசபைக்கு அடியெடுத்து வைத்துள்ளார்.
சென்னை:
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நாகர்கோவில்தொகுதியில் போட்டியிட்டு 11 ஆயிரத்து 600 வாக்குகள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கு முன்பு 6 முறை குளச்சல், நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய அவர் தற்போதுவெற்றியை ருசித்துள்ளார்.
எம்.ஆர்.காந்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து அமைப்புகள் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்து வருகிறார். கன்னியாகுமரி மாவட்ட மக்களின் அன்பை பெற்றவராக விளங்கி வரும் அவர், தற்போது முதல் முறையாக சட்டசபைக்கு அடியெடுத்து வைத்துள்ளார். காலில் செருப்பு அணியாமல், கதர் வேட்டி சட்டையுடன் வலம் வரும் நாயகன். தாய் மண்ணில் பாதம் பட வேண்டும் என்பதற்காகவே செருப்பு அணிவதை கைவிட்டுள்ளார்.
1967-ல் ஜன சங்கத்தில் இணைந்து தனது அரசியல் வாழ்வை தொடங்கியவர். பிரம்மச்சாரியாக வாழ தொடங்கி, பொதுப்பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளார்.
தமிழக சட்டசபை முதல் கூட்டம் கலைவாணர் அரங்கில் நடந்து வருகிறது. இந்த கூட்டத்திற்கு காலில் செருப்பு அணியாமல் நடந்து வரும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி (வயது 75) அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு சூரங்குடியை அடுத்துள்ள கீழ்மாவிளை என்ற கிராமத்தை சேர்ந்தவர் எம்.ஆர்.காந்தி.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நாகர்கோவில்தொகுதியில் போட்டியிட்டு 11 ஆயிரத்து 600 வாக்குகள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கு முன்பு 6 முறை குளச்சல், நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய அவர் தற்போதுவெற்றியை ருசித்துள்ளார்.
எம்.ஆர்.காந்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து அமைப்புகள் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்து வருகிறார். கன்னியாகுமரி மாவட்ட மக்களின் அன்பை பெற்றவராக விளங்கி வரும் அவர், தற்போது முதல் முறையாக சட்டசபைக்கு அடியெடுத்து வைத்துள்ளார். காலில் செருப்பு அணியாமல், கதர் வேட்டி சட்டையுடன் வலம் வரும் நாயகன். தாய் மண்ணில் பாதம் பட வேண்டும் என்பதற்காகவே செருப்பு அணிவதை கைவிட்டுள்ளார்.
1967-ல் ஜன சங்கத்தில் இணைந்து தனது அரசியல் வாழ்வை தொடங்கியவர். பிரம்மச்சாரியாக வாழ தொடங்கி, பொதுப்பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X