search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம்: ஒரே நாளில் 3.26 லட்சம் பேருக்கு தடுப்பூசி

    தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    சென்னை:

    தமிழகத்தில்   கொரோனா வைரஸ்   தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைககளை எடுத்து வருகிறது.

    கொரோனா பரிசோதனை


    தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா பாதிப்பில் இருந்து தப்பித்துவிட வேண்டும் என்ற எண்னத்தில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ள அதிக அளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.


    இந்நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3.26 லட்சம் பேருக்கு  கொரோனா தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசியின் செலுத்திக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டி 1,01,30,594 ஆக உள்ளது.
    Next Story
    ×