என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊரடங்கை மீறிய 407 பேர் மீது வழக்குப்பதிவு
Byமாலை மலர்12 Jun 2021 2:28 PM GMT (Updated: 12 Jun 2021 2:28 PM GMT)
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.
கரூர்:
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. ஊரடங்கை மீறி வெளியிடங்களுக்கு செல்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில் நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முககவசம் அணியாமல் வெளியிடங்களுக்கு வந்த 263 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ.52,600-ம், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத வகையில் 16 வழக்குகள் பதியப்பட்டு அபராதமாக ரூ.8 ஆயிரம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டன. மேலும், ஊரடங்கை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தவர்கள் மீது 124 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மது பாட்டில்களை பதுக்கி விற்றதாக 4 வழக்கு பதியப்படடு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்டம் முழுவதும் மொத்தம் 407 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X