search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    சந்திக்க முயற்சிப்பதோ, வரவேற்பு அலங்காரம் அமைக்கவோ கூடாது- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

    தமிழக அரசின் கடுமையான உழைப்பினால், கொரோனா வைரஸ் தொற்று பரவலின் சங்கிலியை உடைக்கும் முயற்சியில் ஓரளவு நல்ல பலன் கிடைத்துள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை-எளிய மக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளைப்போக்கும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    தமிழக அரசின் கடுமையான உழைப்பினால், கொரோனா வைரஸ் தொற்று பரவலின் சங்கிலியை உடைக்கும் முயற்சியில் ஓரளவு நல்ல பலன் கிடைத்துள்ளது. 

    திருச்சி, தஞ்சை, சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் நாளை முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். இது முழுக்க முழுக்க அரசு முறை பயணம்.

    எனவே என்னை சந்திக்க முயலுவதோ, அல்லது வரவேற்பு அலங்காரம் அமைக்கவோ கூடாது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×