என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சென்னை மாநகராட்சியில் 1702 பேர் காணொலி காட்சி மூலம் டாக்டர்களிடம் ஆலோசனை
சென்னை:
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் சாதாரண சிகிச்சைகளுக்காக மருத்துவரையோ அல்லது மருத்துவமனைகளுக்கோ செல்வதற்கு ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் டெலிமெடிசன் மூலம் சிகிச்சை அளிக்க ‘ஜிசிசிவித்மெட்’ என்ற செயலி உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த செயலியின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சை, அதற்குரிய மருத்துவர்களிடம் காணொலி மூலம் 24 மணி நேரமும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தொடர்பான அறிகுறிகள் உள்ள நபர்கள் இந்த செயலி மூலம் மருத்துவரிடம் ஆலோசனை பெறும் பொழுது சம்பந்தப்பட்ட நபருக்கு ஏற்பட்டுள்ள அறிகுறிகளை மருத்துவர்கள் கேட்டறிந்து அவருக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.
கொரோனா தொற்று பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கும் ‘ஜிசிசிவித்மெட்’ செயலியின் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், பொதுமக்களுக்கு காணொலி காட்சி வாயிலாக மருத்துவ ஆலோசனைகளை வழங்க கூடுதலாக 94983 46510, 94983 46511, 94983 46512, 94983 46513, 94983 46514 ஆகிய வாட்ஸ்அப் தொலைபேசி எண்களும் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் மே 7-ந்தேதி வரை ‘ஜிசிசிவித்மெட்’ செயலியின் மூலம் 1702 நபர்களும், வாட்ஸ்அப் எண்களின் மூலம் 991 நபர்களும், காணொலி காட்சி வாயிலாக மருத்துவர்களிடம் ஆலோசனைகளை பெற்றுள்ளனர்.
இவர்களில் கொரோனா தொற்று அறிகுறியுடன் இருந்த 105 நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்