search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்
    X
    ரெயில்

    தமிழகத்தில் ரெயில்கள் தொடர்ந்து இயங்கும்- தெற்கு ரெயில்வே

    தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் தற்போது இயங்கும் அனைத்து ரெயில்களும் முழுமையாக இயங்கும்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கால் ரெயில் சேவைகள் பாதிக்கப்படுமா? என பல்வேறு தரப்பினரிடையே கேள்வி எழுந்தது.

    தமிழக அரசு

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி கூறியதாவது:-

    தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசிடம் இருந்து தெற்கு ரெயில்வேக்கு, ரெயில்களை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை வரவில்லை. எனவே தமிழகத்தில் தற்போது இயங்கும் அனைத்து ரெயில்களும் முழுமையாக இயங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×