என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் பொதுமக்கள் ஏமாற்றம்
Byமாலை மலர்17 April 2021 10:07 AM GMT (Updated: 17 April 2021 10:07 AM GMT)
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கிருஷ்ணகிரி:
கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தற்போது நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சுகாதார பணியாளர்கள், முன் கள பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், அரசு அலுவலர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது. தொடர்ந்து 45 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 45 வயதை கடந்தவர்கள் 5 லட்சம் பேர் உள்ளனர். கடந்த 14-ந் தேதி வரையில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 55 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 900 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர்.
தற்போது தினமும் தடுப்பூசி போட வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தடுப்பூசிக்கு சில இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேற்று மதியத்திற்கு மேல் தடுப்பூசி இருப்பு இல்லை. இதனால் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில் தடுப்பூசி இருப்பு உள்ள வரையில் தினமும் போடப்பட்டு வருகிறது. இன்று (சனிக்கிழமை) மேலும் 5 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னையில் இருந்து வருகின்றன. எனவே தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X