என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்16 April 2021 5:53 PM GMT (Updated: 16 April 2021 5:53 PM GMT)
திருவள்ளூர் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த காக்களூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 32). இவர் திருவள்ளூரில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். சிவசத்யா (வயது 27) என்ற பெண்ணை கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். திருமணமான நாள் முதல் மகேஷ் மற்றும் அவரது வீட்டில் உள்ளவர்கள் கூடுதல் வரதட்சணை கேட்டு சிவசத்யாவை அடிக்கடி தொல்லை கொடுத்து அடித்து உதைத்து கொடுமை செய்து வந்தனர்.
இதனால் மனவேதனை அடைந்த அவர் தனது பெற்றோரிடம் இது சம்பந்தமாக அழுது புலம்பி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் மனவேதனை அடைந்த சிவசத்யா தன்னுடைய அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X