என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஓய்வுக்காக குடும்பத்தினருடன் மு.க.ஸ்டாலின் இன்று கொடைக்கானல் வந்தார்
கொடைக்கானல்:
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு கடந்த சில வாரங்களாக சென்னையில் தங்கி கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் வெற்றி குறித்து ஆலோசனை மேற்கொண்டார். தற்போது ஓய்வுக்காக தனது குடும்பத்தினருடன் இன்று கொடைக்கானல் வந்தார்.
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் சென்றார். மு.க.ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா, மருமகள் கிருத்திகா, மகள் செந்தாமரை மற்றும் பேரன் பேத்திகள் ஆகியோரும் வந்தனர். இவர்கள் அனைவரும் பாம்பார்புரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பங்களாவில் 2 நாட்கள் ஓய்வெடுப்பார்கள் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஸ்டாலின் வருகை குறித்து பெரும்பாலான கட்சி நிர்வாகிகளுக்கு தெரியவில்லை. அவரது வருகையை அறிந்தஉடன் பாம்பார்புரத்தில் ஏராளமான தி.மு.கவினர் குவியத்தொடங்கினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்