என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேர்தலுக்கு ரூ.102.93 கோடி நிதி ஒதுக்கீடு: துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
Byமாலை மலர்27 Feb 2021 6:57 AM GMT (Updated: 27 Feb 2021 6:57 AM GMT)
சட்டசபை தேர்தலை நடத்துவதற்காக ரூ.102.93 கோடி தேவைப்படுகிறது. இது பொதுத்துறையின் மானிய கோரிக்கை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
சென்னை:
தமிழக சட்டசபை கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இறுதி துணை மதிப்பீட்டை இன்று தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-
தமிழக சட்டசபைக்கான பொதுத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்ததால் வழக்கமான சில முக்கிய செலவினங்களை குறிப்பிடுவது தற்போது உகந்ததாக இருக்காது.
கூடுதல் செலவினங்களை சார்ந்த விபரங்கள் இறுதி துணை மதிப்பீட்டில் உள்ளது. கூடுதல் செலவினங்கள் அனைத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டன. இவை அனைத்தும் செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கான கூடுதல் செலவினங்கள்தான்.
இறுதி துணை மதிப்பீடுகளில் எந்த ஒரு புதிய திட்டத்தின் அறிவிப்போ அல்லது புதிய விவரங்களோ சேர்க்கப்படவில்லை.
சட்டசபை தேர்தலை நடத்துவதற்காக ரூ.102.93 கோடி தேவைப்படுகிறது. இது பொதுத்துறையின் மானிய கோரிக்கை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.
இறுதி துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.21,172.82 கோடி நிதியை ஒதுக்க வழிவகை செய்கிறது. இதற்கு இந்த மாமன்றம் அனுமதிக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் அதில் தெரிவித்து இருந்தார்.
தமிழக சட்டசபை கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இறுதி துணை மதிப்பீட்டை இன்று தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-
தமிழக சட்டசபைக்கான பொதுத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்ததால் வழக்கமான சில முக்கிய செலவினங்களை குறிப்பிடுவது தற்போது உகந்ததாக இருக்காது.
கூடுதல் செலவினங்களை சார்ந்த விபரங்கள் இறுதி துணை மதிப்பீட்டில் உள்ளது. கூடுதல் செலவினங்கள் அனைத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டன. இவை அனைத்தும் செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கான கூடுதல் செலவினங்கள்தான்.
இறுதி துணை மதிப்பீடுகளில் எந்த ஒரு புதிய திட்டத்தின் அறிவிப்போ அல்லது புதிய விவரங்களோ சேர்க்கப்படவில்லை.
சட்டசபை தேர்தலை நடத்துவதற்காக ரூ.102.93 கோடி தேவைப்படுகிறது. இது பொதுத்துறையின் மானிய கோரிக்கை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.
இறுதி துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.21,172.82 கோடி நிதியை ஒதுக்க வழிவகை செய்கிறது. இதற்கு இந்த மாமன்றம் அனுமதிக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் அதில் தெரிவித்து இருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X