search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    தமிழகத்தில் இதுவரை 37 ஆயிரம் போலீசாருக்கு தடுப்பூசி

    தமிழகத்தில் இதுவரை 37 ஆயிரம் போலீசார் தடுப்பூசி போட்டுள்ளனர்.
    சென்னை:

    தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: -

    தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 583 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 275 ஆண்கள், 192 பெண்கள் என மொத்தம் 467 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 168 பேரும், கோவையில் 40 பேரும், செங்கல்பட்டில் 45 பேரும், திருவள்ளூரில் 35 பேரும், குறைந்தபட்சமாக அரியலூர், நீலகிரி, தருமபுரி, ராமநாதபுரம், தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூரில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 50 ஆயிரத்து 90 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் 2 பேரும் என 5 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதுவரையில் 12,483 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனா பாதிப்பில் இருந்து 471 பேர் நேற்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது சிகிச்சையில் 4 ஆயிரத்து 53 பேர் உள்ளனர்.

    தமிழகத்தில் 37-வது நாளாக நேற்று 728 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 14 ஆயிரத்து 428 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 29 ஆயிரத்து 169 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    இதுவரை 37 ஆயிரத்து 72 போலீசார் தடுப்பூசி போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×