என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கமுதி அருகே மணல் கடத்திய 5 பேர் கைது
Byமாலை மலர்21 Feb 2021 1:22 PM GMT (Updated: 21 Feb 2021 1:22 PM GMT)
கமுதி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் மணல் கடத்தி வந்த 5 பேரை கைது செய்தனர்.
கமுதி:
கமுதி அருகே மண்டல மாணிக்கத்தை சேர்ந்த இருள்ராஜ் (வயது22), நல்லீஸ்வரன் (22), கருத்தாமலை (22), அழகர்சாமி (19), அரிகிருஷ்ணன் (23) ஆகிய 5 பேர் காரில் 25 மணல் மூடைகளை கடத்தி சென்றனர். அப்போது, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
இதில் காரில் மணல் கடத்தியது தெரியவந்தது. அப்போது காரில் வந்தவர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சப்-இன்ஸ்பெக்டரை கீழே தள்ளி விட்டு காரில் வந்தவர்கள் தப்பிச்சென்றனர். இதில் அவர் காயம் அடைந்தார். பின்னர் போலீசார் அவர்களை விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்தனர். இதுகுறித்து கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனர்.
காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கமுதி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X