என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காதலுக்கு உறவினர்கள் எதிர்ப்பு: தாயுடன் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்19 Feb 2021 6:11 PM GMT (Updated: 19 Feb 2021 6:11 PM GMT)
ஊத்துமலை அருகே காதலுக்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தாயுடன் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள கருவந்தா கிராமம் வி.ஏ.ஓ. தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 53), விவசாயி. இவரது மனைவி தெய்வக்கனி (48). இவர்களுக்கு கலையரசி (25) என்ற மகளும், சுந்தர் என்ற மகனும் உண்டு.
கலையரசி பி.எஸ்சி. படித்து முடித்து உள்ளார். தற்போது சுரண்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் வீட்டில் உள்ள ஒரு அறையில் தெய்வக்கனி, கலையரசி ஆகியோர் தூங்கினார்கள்.
நேற்று காலையில் வெகு நேரம் ஆகியும் அவர்களின் அறை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால், திறக்கவில்லை. பின்னர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்போது அங்கு தெய்வக்கனி, கலையரசி ஆகியோர் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தனர். இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக ஊத்துமலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது, பல்வேறு தகவல்கள் வெளியாகின. அதாவது கலையரசிக்கு சுரண்டையைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் கலையரசி குடும்பத்துக்கு தெரியவந்தது. கிருஷ்ணன் மற்றும் உறவினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், கலையரசியின் தாயார் தெய்வக்கனி காதலுக்கு ஆதரவு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக குடும்பத்தில் பிரச்சினை இருந்து வந்தது.
காதலுக்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தாயும், மகளும் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். நேற்று முன்தினம் இரவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை பூட்டிவிட்டு, அறையில் ஒரே சேலையில் தெய்வக்கனி, கலையரசி ஆகியோர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
எனினும் காதல் பிரச்சினை காரணமாக தாயும், மகளும் தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊத்துமலை அருகே காதலுக்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தாயுடன் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X