search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதலுக்கு எதிர்ப்பு"

    கொடைக்கானலில் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

    பெருமாள்மலை:

    கொடைக்கானல் அன்னை தெரசா நகரை சேர்ந்த ஆரோக்கியதாஸ் மகன் ஆனந்த் (வயது26). இவருக்கு திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவி விவாகரத்து பெற்று சென்றார்.

    இதனால் 2-வது திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி டோபிகானா பகுதியை சேர்ந்த ஜெனிபர் என்ற பெண்ணை பார்க்க சென்றனர்.

    ஆனால் ஆனந்தின் பெற்றோருக்கு அந்த பெண்ணை பிடிக்க வில்லை. அதன்பின்பு ஆனந்த் மற்றும் ஜெனிபர் பேசி பழகி வந்துள்ளனர். நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறியது.

    ஆனந்த், ஜெனிபரை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனால் உறவினர்கள் மற்றும் பெற்றோர் ஆனந்தை திட்டி உள்ளனர்.

    இதனால் மனமுடைந்த ஆனந்த் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×