என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நங்கவள்ளி அருகே காதல் திருமணம் செய்த பெண் காரில் கடத்தல்
Byமாலை மலர்13 Feb 2021 5:28 PM GMT (Updated: 13 Feb 2021 5:28 PM GMT)
நங்கவள்ளி அருகே காதல் திருமணம் செய்த பெண்ணை காரில் கடத்தி சென்ற தந்தை உள்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேச்சேரி:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சடையம்பாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 22). நெசவு தொழிலாளி.
இவரும் அந்த பகுதியை சேர்ந்த மாலினி (19) என்பவரும் காதலித்து வந்தனர். ஆனால் காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் வீட்டுக்கு தெரியாமல் பாரியூரில் உள்ள அம்மன் கோவிலில் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.
பின்பு குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் பிரசாந்த்-மாலினி தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேசி சமரசம் செய்தபோது பிரசாந்தின் குடும்பத்தார் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். ஆனால் மாலினியின் குடும்பத்தார் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாலினி, பிரசாந்துடன் சென்றுவிட்டார். பின்னர் மாலினி மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரும் நங்கவள்ளி அருகே குட்டப்பட்டி 4 ரோடு பகுதியில் உள்ள பிரசாந்தின் சித்தப்பா வீட்டில் தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை பிரசாந்த், மாலினி மற்றும் அவரது உறவினர்கள் வீட்டின் அருகில் இருந்தனர். அப்போது மாலினியின் தந்தை ராஜேந்திரன் மற்றும் நல்லகுமார், கோகுல் உள்பட 11 பேர் 2 கார்களில் வந்து பிரசாந்த் மற்றும் அவரது உறவினர்கள் லட்சுமி, பிரியா ஆகிய 3 பேரையும் தாக்கிவிட்டு மாலினியை காரில் கடத்தி சென்றனர்.
இதுகுறித்து பிரசாந்த் நங்கவள்ளி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் மாலினியின் தந்தை ராஜேந்திரன் உள்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X