என் மலர்
நீங்கள் தேடியது "woman kidnapped"
- கடந்த மாதம் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்த லட்சுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
- செங்கல் சூளை உரிமையாளர் ரூ.5 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டி தனது தாயை கடத்தி சென்றிருப்பதாக தெரிவித்துள்ளார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டி அருகே ராமண்ணன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது50). இவரது மகன் முத்து. இவர்கள் 2 பேரும் கிருஷ்ணகிரி அருகே ஒரு செங்கல் சூளை உரிமையாளரிடம் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு ரூ.2 லட்சத்து 68 ஆயிரம் பெற்றதாக கூறப்படுகிறது.
பின்னர் தாயும், மகனும் செங்கல் சூளையில் வேலை செய்து அந்த கடனை அடைத்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்த லட்சுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து உடல் நிலை சீரானதும் மீண்டும் வேலைக்கு வருவதாக தொலைபேசி மூலம் கூறியுள்ளனர்.
அதை ஏற்றுக்கொள்ளாத செங்கல் சூளை உரிமையாளர் நேற்று மாலை அடியாட்களுடன் பெரியாம்பட்டிக்கு வந்து உடனடியாக வேலைக்கு வர வேண்டும் என்று மிரட்டி காரில் லட்சுமியை வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்தி சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய மகன் முத்து நேற்று இரவு தருமபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார்.
அதில் செங்கல் சூளை உரிமையாளர் ரூ.5 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டி தனது தாயை கடத்தி சென்றிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மாவட்ட எஸ்.பி. உத்தரவின் காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் தலைமையில் தனிப்படையினர் விரைந்து சென்றனர்.
அப்போது புகார் கொடுத்த ஒரு மணி நேரத்தில் காரில் பெண்ணை கடத்தி சென்றவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் பெண்ணை மீட்டு அவரது மகனிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து பெண்ணை கடத்திய செங்கல் சூளை அதிபர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணை தாக்கி காரில் தூக்கிபோட்டு சென்ற சம்பவத்தால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தனுஷ்கண்டன் அளித்த புகாரின் பேரில் எடப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
- போலீசாரின் முழு விசாரணைக்கு பின்னரே இக்கடத்தலில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து விபரம் தெரியவரும்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி செட்டிமாங்குறிச்சி கிராமம், சின்னதாண்டவனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் தனுஷ் கண்டன் (25). இவர் ஓசூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருடன் வேலை பார்த்த தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள சின்னம்பள்ளி கிராமம் தோழுரை சேர்ந்த குமாரசெல்வம் என்பவரது மகள் ரோஷினி (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் நாளடைவில் நட்பு காதலாகி அவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 4-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு பிறகு காதல் ஜோடி எடப்பாடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் இருவரும் திருமண வயதினை எட்டியிருந்ததால், இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ரோஷினியை அவரது காதல் கணவர் தனுஷ்கண்டனுடன் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து புதுமண தம்பதியினர் எடப்பாடி அடுத்த சின்னதாண்டவனூர் பகுதியில் உள்ள தனுஷ் கண்டன் வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை தனுஷ்கண்டன் வீட்டிற்கு சொகுசு காரில் வந்த இறங்கிய கும்பல் கையில் பட்டா கத்தியுடன் அதிரடியாக தனுஷ் கண்டன் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த ரோஷினியை வலுக்கட்டாயமாக கதற கதற காருக்குள் ஏற்றி கடத்திச் சென்றனர். மேலும் அதனை தடுக்க வந்த அப்பகுதி மக்கள் மற்றும் தனுஷ்கண்டன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பட்டாக்கத்தியை காட்டி மிரட்டிய கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் ரோஷினியை காரில் கடத்தி சென்றது.
இதுகுறித்து தனுஷ்கண்டன் அளித்த புகாரின் பேரில் எடப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசாரின் விசாரணையில் ரோஷினியை கடத்திச் சென்ற கும்பல் ஈரோடு மாவட்டத்தில் பதுங்கி இருப்பது குறித்து தகவல் கிடைத்தது. இதையடுத்து ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள டி.எஸ். பாளையத்தில் பதுங்கி இருந்த கும்பலை நேற்று நள்ளிரவில் போலீசார் சுற்றி வளைத்தனர். மேலும் அப்பகுதியில் வெங்கடாஜலம் என்பவர் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ரோஷினியை மீட்டனர்.
மேலும் இந்த கடத்தல் தொடர்பாக ரோஷினியின் தந்தை குமாரசெல்வம், தாய் சித்தரா மற்றும் அவரது சகோதரி சவுமியா, உறவினர் லட்சுமணன், ஜோதிடர் கருப்பண்ணன், வெங்கடாசலம் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து எடப்பாடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடத்தல் வழக்கில் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடத்தப்பட்ட ரோஷினி தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படும் நிலையில் அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை எடப்பாடி போலீஸ் நிலைய பெண் போலீசார் செய்து வருகின்றனர். போலீசாரின் முழு விசாரணைக்கு பின்னரே இக்கடத்தலில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து விபரம் தெரியவரும்.
போரூர்:
கீழ்ப்பாக்கம், டெய்லர்ஸ் சாலை திருவீதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கவுதமன். இவரது மனைவி திலகவேணி. இவர் அமைந்தகரை இன்ஸ்பெக்டர் பெருந்துறை முருகனிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
நான் தற்போது வசித்து வரும் வீட்டை கடந்த 2012-ம் ஆண்டு சகாயராணி என்பவரிடம் இருந்து ரூ. 50 லட்சம் விலை பேசி ரூ. 35 லட்சம் பணம் செலுத்தி வீட்டை கிரையம் செய்து கொண்டேன்.
மீதமுள்ள தொகை ரூ. 15 லடசத்தை 2 வருட தவணையாக தருவதாக அவரிடம் ஓப்பந்தம் போட்டுக் கொண்டேன். அதில் சிறுக, சிறுக ரூ, 5 லட்சம் பணத்தை திருப்பி செலுத்திவிட்டேன். மீதம் உள்ள ரூ. 10 லட் சத்தை கொடுக்க வேண்டி இருந்தது.
இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி மதியம் என்னை தொடர்பு கொண்ட சகாயராணியின் கணவர் தாஸ் நேரில் பேச வேண்டும் என்று கூறி அழைத்ததன் பேரில் அமைந்தகரை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வணிக வளாகம் அருகே நான் சென்றேன்.
அப்போது அங்கு வந்த தாஸ் மற்றும் அவருடன் இருந்தவர்கள் என்னை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சரமாரியாக தாக்கினர்.
பின்னர் ஈ.சிஆர். சாலையில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து உடனடியாக ரூ. 10 லட்சம் பணம் வேண்டும் என்று கேட்டு மேலும் தாக்கினர்.
அங்கிருந்து தப்பிய நான் ராயப்பேட்டை அரசு மருத் துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பினேன். என்னை கடத்தி சென்று தாக்கிய தாஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த வணிக வளாகம் அமைந்துள்ள பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள சித்தாலங்குடி ஆனைக்குளத்தை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி அழகுகனகவள்ளி (வயது 20). இவர்களுக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 31-ந்தேதி அழகு கனகவள்ளி சாமி கும்பிட கோவிலுக்கு சென்றார். அப்போது திருப்பூரைச் சேர்ந்த மணி, அவரது நண்பர் குமார் ஆகியோர் அழகு கனகவள்ளியை திருமணம் செய்யும் நோக்கத்தில் கடத்தி சென்று விட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து சோழவந்தான் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மணி, குமார் ஆகியேரை தேடி வருகிறார்கள்.






