search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோழவந்தான் அருகே கோவிலுக்கு சென்ற புதுப்பெண் கடத்தல்
    X

    சோழவந்தான் அருகே கோவிலுக்கு சென்ற புதுப்பெண் கடத்தல்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கோவிலுக்கு சென்ற புதுப்பெண்ணை கடத்தியதாக 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    மதுரை:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள சித்தாலங்குடி ஆனைக்குளத்தை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி அழகுகனகவள்ளி (வயது 20). இவர்களுக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 31-ந்தேதி அழகு கனகவள்ளி சாமி கும்பிட கோவிலுக்கு சென்றார். அப்போது திருப்பூரைச் சேர்ந்த மணி, அவரது நண்பர் குமார் ஆகியோர் அழகு கனகவள்ளியை திருமணம் செய்யும் நோக்கத்தில் கடத்தி சென்று விட்டதாக தெரிகிறது.

    இதுகுறித்து சோழவந்தான் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மணி, குமார் ஆகியேரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×