என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல்லில் பிளஸ்-1 மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை
Byமாலை மலர்11 Feb 2021 11:03 AM GMT (Updated: 11 Feb 2021 11:03 AM GMT)
நாமக்கல்லில் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாததால் பிளஸ்-1 மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல்:
நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் வசித்து வருபவர் துரைராஜ். இவர் பலப்பட்டரை மாரியம்மன் கோவில் அருகே உள்ள கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் காவியா (வயது 17). இவர் நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
கொரோனா விடுமுறைக்கு பிறகு கடந்த 8-ந் தேதி முதல் பள்ளிக்கு சென்று வந்த மாணவி, தனக்கு அந்த பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லை, வேறு பள்ளியில் சேருங்கள் என பெற்றோரிடம் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை வெளியே சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர். இருப்பினும் மாணவி காவியா கிடைக்கவில்லை. இதற்கிடையே நாமக்கல் ரெயில் நிலையம் அருகே உள்ள விவசாய கிணறு ஒன்றில் காவியா கிடந்தது தெரியவந்தது.. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் காவியா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இந்த சம்பவம் குறித்து துரைராஜ் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாததால் மாணவி காவியா கிணற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X