search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஷ்பு-ஓ.பன்னீர்செல்வம்
    X
    குஷ்பு-ஓ.பன்னீர்செல்வம்

    ஒரே விமானத்தில் மதுரை வந்த ஓ.பன்னீர்செல்வம்-குஷ்பு

    மதுரையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்வதற்காக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், நடிகை குஷ்பும் ஒரே விமானத்தில் வந்தனர்.
    மதுரை:

    மதுரை அருகே டி.குன்னத்தூரில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.

    மதுரையில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க. செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்புவும் சென்னையில் இருந்து அதே விமானத்தில் மதுரை வந்தார்.

    அவர்கள் இருவரும் விமானத்தில் அடுத்தடுத்த இருக்கைகளில் அமர்ந்து மதுரைக்கு பயணித்தனர். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலை தளங்களில் வெளியாகி உள்ளது.
    Next Story
    ×