search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    மொரப்பூரில் ரெயில் மோதி முதியவர் பலி

    மொரப்பூரில் ரெயில் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மொரப்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள பச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 78). இவர் மொரப்பூர் அருகே உள்ள எம்.வேட்ரப்பட்டியில் உறவினர் வீட்டுக்கு வந்தார். இவர் நேற்று காலை மொரப்பூர் வந்தார். பின்னர் எம்.வேட்ரப்பட்டி செல்வதற்காக முதியவர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த சரக்கு ரெயில் முருகன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேலம் ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×