search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    கலவை அருகே மொபட்டில் சென்றபோது மயங்கி விழுந்த முதியவர் பலி

    கலவை அருகே மொபட்டில் சென்றபோது மயங்கி விழுந்த முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கலவை:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா நாயனதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பபிள்ளை (வயது 65). இவர் கடந்த 2-ந் தேதி தனது பேரன் மகேஷ் (வயது 25) என்பவருடன் கலவை அருகே உள்ள அரும்பாக்கம் ஏரியில் மீன்பிடிக்க வலை விரித்துள்ளார். பின்னர் மொபட்டில் வீட்டுக்கு சென்றார். அப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவர் செய்யாறு அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதுகுறித்து முனியப்பபிள்ளை மருமகள் ரேவதி கலவை போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×