என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கலவை"
- பூஞ்சை 250 மில்லியுடன் 750 மில்லி நீர் சேர்த்து எரு குழிகளில் தெளிப்பதன் மூலம் வண்டுகள் மற்றும் இளம் புழுக்களை அழிக்கலாம்.
- ஒரு மண்பானையில் 5 லிட்டர் நீருடன் ஒரு கிலோ ஆமணக்கு, புண்ணாக்கு சேர்ந்த கலவையை வைத்து காண்டாமிருக வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
பேராவூரணி:
தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டு அறிகுறிகள் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) சாந்தி கூறியிருப்பதாவது, கற்பக விருட்சமாம் தென்னை சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் 7000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இதன் தாக்குதல் ஆண்டு முழுவதும் இருந்தாலும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை அதிக அளவில் காணப்படுகிறது.
காண்டாமிருக வண்டுகள் தென்னையின் உச்சியில் விரிவடையாக குருத்துப் பாகத்தில் துளையிட்டு மரத்தில் உள்ளே சென்று மொட்டு பகுதியை மென்று விடுகிறது.
தாக்கப்பட்ட பாகம் போக எஞ்சிய குறுத்து விரியும் போது தென்னை மட்டை முக்கோணம் போல, சீராக கத்தரியால் வெட்டியது போல் இருக்கும். காண்டாமிருக வண்டு தாக்குதலால் 10% முதல் 15 சதவீதம் வரை மகசூல் பாதிக்கும்.
தாக்கப்பட்ட மடிந்து போன மரங்களை தோப்புகளில் இருந்து அப்புறப்படுத்தி அழித்து விட வேண்டும்.
குப்பை மற்றும் எரு குழிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எரு குழிகளில் உள்ள முட்டை, புழுக்கள், கூட்டுப்புழுக்களை பொறுக்கி அழித்து விட வேண்டும்.
மெட்டாரை சியம், அனிசோபிலே, பச்சைமஸ்கார்டைன் பூஞ்சை 250 மில்லியுடன் 750 மில்லி நீர் சேர்த்து எரு குழிகளில் தெளிப்பதன் மூலம் வண்டுகள் மற்றும் இளம் புழுக்களை அழிக்கலாம்.
அந்தி நேரங்களில் விளக்கு பொறிகளை வைத்து காண்டாமிருக வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
இளம் தென்னங்கன்றுகளுக்கு வேப்பங்கொட்டை தூளையும் மணலையும் 1: 2 என்ற விகிதத்தில் கலந்து மரம் ஒன்றிற்கு 150 கிராம் வீதம் நடுகுருத்தின் மூன்று மட்டை இடுக்குகளில் வைக்கலாம்.
இளம் தென்னங்கன்றுகளுக்கு நாப்தலின் உருண்டை மூன்று வீதம் பொடி செய்து மட்டை இடுக்குகளில் வைக்கலாம். ஒரு மண்பானையில் 5 லிட்டர் நீருடன் ஒரு கிலோ ஆமணக்கு புண்ணாக்கு சேர்ந்த கலவையை வைத்து காண்டாமிருக வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
ரெய்னோலூர் இன கவர்ச்சி பொறியினை எக்டேருக்கு 5 என்ற விகிதத்தில் வைத்து காண்டாமிருக வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம். ஐந்து கிராம் போரேட் மருந்தினை துளையுடன் கூடிய பொட்டலமாக எடுத்து ஆறு மாத இடைவெளியில் ஆண்டிற்கு இரண்டு முறை வைக்கலாம்.
இவ்வாறு கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்