search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    திருவள்ளூர் அருகே கார் மோதி முதியவர் பலி

    திருவள்ளூர் அருகே கார் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பூந்தமல்லி:

    திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் பஸ் நிலையம் அருகே 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×