search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு நடந்த வீ்ட்டில் பீரோ உடைக்கப்பட்டு கிடக்கும் காட்சி.
    X
    திருட்டு நடந்த வீ்ட்டில் பீரோ உடைக்கப்பட்டு கிடக்கும் காட்சி.

    ஜோலார்பேட்டையில் 2 வீடுகளில் 11 பவுன் நகை, பணம் திருட்டு

    ஜோலார்பேட்டையில் ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் வீடு உள்பட 2 வீடுகளில் 11 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையில் உள்ள பழைய ஜோலார்பேட்டை, வரதராஜ முதலியார் தெருவை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 76), ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிவிட்டனர். நள்ளிரவு நேரத்தில் மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து தனி அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர்.

    நேற்று மாலை ஸ்டாலின் மனைவி பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்து.

    அதே பகுதியை சேர்ந்தவர் ஜோதாஸ், இவரது மனைவி ஸ்டெல்லா. இவர் நேற்று முன்தினம் மாலை சந்தைக்கோடியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று மாலை வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து இருவரும் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வீடுகளிலும் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×