search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    வெவ்வேறு சம்பவங்களில் பட்டதாரி வாலிபர்- முதியவர் தற்கொலை

    வெவ்வேறு சம்பவங்களில் பட்டதாரி வாலிபர்- முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
    பாடாலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிமணி. இவருடைய மகன் சுந்தரராஜ்(வயது 22). பட்டதாரி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்ததாகவும், இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை என்றும் தெரிகிறது.

    இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று வயலுக்கு தெளிப்பதற்காக வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அரியலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதேபோல் ஆலத்தூர் தாலுகா சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா(69). இவருக்கு பல ஆண்டுகளாக தீராத மூட்டு வலி இருந்து வந்தது. இதையடுத்து இவர் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்தார். இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×