என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மொபட்டில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது
Byமாலை மலர்5 Jan 2021 11:29 AM GMT (Updated: 5 Jan 2021 11:29 AM GMT)
மொபட்டில் கஞ்சா கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை கீரைத்துறை போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்தனர். திடீரென்று அவர்கள் சிந்தாமணி ரோடு பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி விசாரித்து வந்தனர். அந்த நேரத்தில் 2 மொபட் வண்டியில் 4 பேர் அந்த வழியாக வந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து வேகமாக செல்ல முயன்றனர். உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில் கீரைத்துறை பசும்பொன் நகரை சேர்ந்த காளீஸ்வரன் (வயது 29), ராமகிருஷ்ணன்(36), குமரவேல்(43), அனுப்பானடி ஜெயமாரி(25) என்பதும், அவர்கள் மொபட் வண்டியில் கஞ்சா கடத்தி சென்றதும் தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 மொபட் வண்டி மற்றும் 1 கிலோ 300 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X